Sunday, April 28, 2019

தொல்காப்பியம் -- I

கல்வி என்பது அறிவு. நம் தமிழ் கிரந்தங்களில் , தொன்மையானது தொல்காப்பியம் - படித்து மே சிலிர்க்க வாய்த்த விஷயங்கள்.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

கரையானும், இருமும் மூன்று அறிவுள்ள பிராணிகள் என்கிறார் தொல்காப்பியர்.

அந்த மூன்று அறிவுகள் என்ன என்றால், அதற்கும் அவரே விளக்கம் தருகின்றார்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;

நாவு, மூக்கு, பரிசம் (தொடுதல்/ உணர்ச்சி) - ஆகிய மூன்றும் உள்ளவைகள் எறும்பு மற்றும் கரையான் என்கிறார்.

என்ன அற்புதம் பார்த்தீர்களா? வீனா வம்பு பேசி வெள்ளை புலையர்கள் சொன்ன திராவிடத்தை நம்பி அழிந்து போன அறியவாளிகளுக்கு , உண்மைத்தமிழரின் பண்பாடும் வைதிக முறையும் ஒரு என்று உணர்த்தும் உன்னதமான நூல் தொல்காப்பியம்.

Monday, February 25, 2019

நின் நாமம் சொல்வதன்றி..

நின் நாமம் சொல்வதன்றி தவமொன்றும் நானறியேன்
என்னப்பனே நரசிம்மா என்னை நீ ஆட்கொள்வாய் என்னேரமும்!

மலமும் சலமும் கழித்து எந்தன் வாயில் உமிழ்நீரும் ஊற
யமபடர்கள் என்னை கயிற்றால் கட்டி இழுக்க
செய்வதறியாது நான் இருக்கும் நேரம் !
நின் திருநாமம் நின் திருவுருவம் எந்தன் சிந்தையில் தோன்றிட வேண்டுமே!
அப்போதும் இப்போதும் என்னை காக்க வேண்டும் என்னப்பனே நரசிம்மா!

ஆன்மாவும் மெய்யும் மருளும் நானறியேனே!
பாவியேன் அறிவதெல்லாம் நின்திருநாமங்களே!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

பதுமபாதன் சங்கரன் பிரகலாதன் ஆதிவன் சடகோபர்கான் ஆகியோர்க்கு அருளிய கருணைக்கடலே!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

பேராசை என்னும் பேய் என்னைப்பற்றி எந்தன் விவேகத்தை மறைக்குமே !
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

நின் திருத்தாலும் நின் திருநாமமும் அன்றி வேறொன்று அறியேன் இவ்வுலகில்!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!