Thursday, June 30, 2016

ஆச்சாரக் கோவையில் முத்துக்கள்

ஆச்சாரக் கோவை என்னும் இந்த நூல்,  பெருவாயின்முள்ளியார்  என்பவரால் இயற்றப் பட்டது. நம்முடைய வாழ்க்கையில்   கடை பிடிக்க வேண்டிய ஆசாரங்களை மிகவும் அழகாக  எழுதி  இருக்கிறார்.ஆச்சாரக்கோவை என்றால் - ஆச்சாரங்களின் மாலை என்று பொருள் படும்.

ஆசார வித்து 

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

இங்கு அச்சாரம் அல்லது நல்லொழுக்கத்துக்கு   வித்து என்ன என்பதை மிகவும் அழகாகக்   குறிப்பிடுகின்றார். அதாவது -

  1. நன்றி மறவாமை, 
  2. வீரம் உடைமை,
  3. இனிமையான பேச்சு,
  4. எந்த உயிர்களுக்கும்  ஹிம்சை செய்யாமல் இருத்தல், 
  5. கல்வி,
  6. அறிவு உடன்  இருத்தல், 
  7. நல்ல மக்களோடு சேர்தல், 
  8. ஊரோடு சேர்ந்து வாழ்தல் 

வட மொழியிலே ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் என்று பொருள் படும்.

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

பொதுவாக ஒரு செயலை செய்தல் வரும் நற்பயன்களை பின்னால் கூறுவது வழக்கம். ஆனால் இந்த நூலிலே முதலிலேயே சொல்லி விட்டார் என்றால், ஒழுக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று பாருங்களேன்.

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.

அப்படி ஆக ஆச்சாரம் என்னும் ஒழுக்கம் தவறாமல் வாழ்வோர் அடையும் நற்பயன்கள் என்ன என்பதை இங்கு நூலாசிரியர் காட்டுகின்றார்:

பிறப்பு - (நல்ல குடும்பத்தில் பிறத்தல்)
நெடுவாழ்க்கை - நல்ல நெடிய அல்லது நீண்ட ஆயுள்
செல்வ செழிப்பு - நல்ல செல்வ செழிப்பு மிக்க வாழ்க்கை
வனப்பு - உடல்  அழகு
நிலக்கிழமை - நிலத்தை ஆளுதல் அல்லது நிலத்தை உடைமை
மீக்கூற்றம் - மங்காத புகழ்
கல்வி  - நல்ல கல்வி
நோயின்மை - நோய் இல்லாத நீண்ட வாழ்க்கை

அப்படியாக இந்த 8 பயன்களையும் தரும் நல்லொழுக்கங்களை எவை என்று இனி தெரிந்து கொள்வோம்.மேற்கூறிய எட்டு விதமான நற்பயன்களை எல்லாவற்றயும் அதன் இலக்கணத்துக்குத் தக்க வாறு - நன்கு  பேர்கள் மத்தியிலே பெருமிதத்தோடு இருக்கும்படியாகப் பெறுவார் என்பது நூலாசிரியர்  மற்றும் சித்திரங்களின் கருத்து.

தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்

தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

நான்கு விஷயங்களை நாம் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்: - தக்ஷிணை, யஞ யாகாதிகள், தவம்  என்று சொல்லப்படும் இறை தொண்டு , கல்வி  (தமிழ் இலக்கியங்கள், மற்றும் வேத ஆகமங்கள்) . இந்த நான்கையும்   - அறம், பொருள் , இன்பம் என்று சொல்லப் பெரும் தர்மம் , அர்த்த, காமம் என்று சொல்லப் படும்  எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் காத்துக் கொள்ள வேண்டும். அப்படி, சாஸ்திரங்களுக்கு அனுகூலமான விஷயங்களை , பார்ப்பனர் மற்றும் எல்லோரும்  பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் - தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்லப்படும் 3 விஷயங்களும் கெட்டுப் போய் விடும் என்கிறார் நம்முடைய நூலாசிரியர்.

முந்தையோர் கண்ட நெறி

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

நம்முடைய மூதாதையர்கள் கண்ட நெறி என்ற சாத்திரம் என்ன என்பதை இங்கு தெளிவாகக் கூறுகின்றார்.தரும சாஸ்திரங்களில் சொல்லப் பெட்ரா விஷயங்களை தெள்ளத்தெளிவாக இங்கு சொல்கின்றார்.


  1. வைகறையில் (ப்ரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்பெறும் 4-6 AM)  துயில் எழுதல்
  2. தன்னுடைய (தொழில்) தர்மத்தையும் ,  
  3. தரும வழியில் எப்படி பொருள் சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் மனதினால் சிந்தித்து, 
  4. உண்மை உள்ளவனாகி பெற்ற தந்தை தாயாரை வணங்கி எழுத்து, 

ஒரு நாளை துவங்க வேண்டும் என்பது - நம்முடைய தமிழர் மரபு என்கிறார் நூல் ஆசிரியர்.

 எச்சிலுடன் தீண்டத் தகாதவை

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 

நம்முடைய மரபிலே (ஸம்ப்ரதாயத்திலே) எச்சில் என்பது ஒரு  கீழ்மையான விஷயம். சாஸ்திரங்களில் சொல்லப்பெற்ற விஷயத்தை இங்கு அழகாகக் கூறுகின்றார். எச்சிலுடன் தொடக் கூடாதவை என்ன என்று இங்கு பார்ப்போம்:

  1. பசு - பசு மாடு 
  2. பார்ப்பார் - ப்ராஹ்மணர்கள் 
  3. தீ - அக்னி 
  4. தேவர் - தெய்வ விக்கிரகங்கள் / பூஜா வஸ்துக்கள் 
  5. உச்சந்தலை 

மேற்கூறிய ஐந்து  பொருட்களையும், எச்சிலுடன் எவருமே கண்டிப்பாகத் தீண்ட கூடாது என்கிறார்.

எச்சிலுடன் காணக் கூடாதவை

எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.

எச்சிலுடன் காணக்கூடாத விஷயங்கள் என்ன என்று மிகவும் தெளிவாகக் கூறுகின்றார் இங்கு:

  1. புலை - புலை என்றால் பிணம்  அன்று பொருள் படும். (சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்களை புலையர்கள் என்று கூறுவார்கள்)
  2. திங்கள் - சந்திரன்
  3. ஞாயிறு - சூரியன் 
  4. நாய் 
  5. மீன் 

மேற்கூறிய இந்த ஐந்து பொருட்களையும் எச்சிலுடன் காணக்கூடாது என்பது நம்முடைய மரபு. சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு , எச்சிலுடன் வீடு முழுக்க சுற்றித் திரிவது ஆகியவை மிகவும் தவறு என்று பொருள் கொள்ள வேண்டும்.

 எச்சில்கள்

எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

எச்சில் என்றால் என்ன என்பதை இங்கு ஆசிரியர் தெளிவாகக் காட்டுகின்றார்:

  1. மலம் 
  2. ஜலம் - மூத்திரம் 
  3. இணைவிழைச்சு  - உடல் உறவின் பொழுது வெளியாகும் திரவங்கள் 
  4. வாயின் விழைச்சு - வாயில் உற்பத்தி ஆகும் எச்சில் மற்றும் சொள்ளு  ஆகியவைகள்.

மேற்கூறிய நான்கு விஷயங்கள் எச்சில் எனப்படும்.அதனைத் தவிர உடலில் இருந்து வெளியேறும் சீழ்,இரதம் போன்ற திரவங்கள் எல்லாமே எச்சில் ஆகும்.(அதாவது நோய் கிருமிகளை பரப்பும் தன்மை உடையவை என்று பொருள் கொள்ள வேண்டும்).றிவியல் எல்லாம் வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் இந்த விஷயங்களை எல்லாம் நமக்காகப் பகுத்து வைத்துள்ளனர்.

எச்சிலுடன் செய்யக் கூடாதவை

நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.

அப்படியாக , எச்சிலுடன் இந்தக் காரியங்களை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறர் நூலாசிரியர் இங்கு:

  1. ஓதார்  - வேதங்களையும் மற்ற சமய நூல்களையும்  ஓதக் கூடாது,
  2. உரையார் - எதயும் பேசிக் கூடாது 
  3. உறங்குதல் கூடாது 

அதாவது மேற்கூறிய நான்கு வகை எச்சிலுடனும் இந்த 3 செயல்களையும் செய்யக் கூடாது என்கிறார். எப்பொழுதுமே மேதைகள், அறிவாளிகள் அந்தக் காரியங்களைச்  செய்ய மாட்டார்கள் என்று சொல்கின்றார்.

காலையில் கடவுளை வணங்குக

நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

காலையில் எழுந்தவுடன் வேம்பு அல்லது வேலம்  குச்சிகளால் பல் துலக்கி, கண்களை நன்று கழுவி, அதன் பிறகு தன வணங்கும் தெய்வத்தை வணங்கி(நமஸ்கரித்து) வேறு எந்த வேலையும்   செய்ய வேண்டும். மாலைப் பொழுதில், சந்தியா காலத்தில் உட்கார்ந்து கொண்டு தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது சாத்திரம்.

 நீராட வேண்டிய சமயங்கள்

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.

அதாவது நீராட வேண்டிய தருணங்கள் எவை என்று இங்கு மிக துல்லியமாகக் காட்டுகின்றார் நூல் ஆசிரியர்:


  1. தேவர் வழிபாடு - திருவாராதனம் என்று சொல்லப் படும் பூசை செய்யும் காலம்  (பூஜைக்கு முன்பு)
  2. தீக்கனா - தீய கனவு காணும் காலம் (கண்டா பிறகு)
  3. வாலாமை - பிறப்பு (மற்றும் இறப்பு) தீண்டல்கள் உள்ள  / தீண்டிய காலத்திலும்  (தீட்டு கழிந்த பின்பு)
  4. உண்டது கான்றல் - வாந்தி எடுத்த காலம்  (பின்பு)
  5. மயிர்களைதல் - முடியை வெட்டிக் கொள்ளுதல் / மொந்தை அடித்துக் கொள்ளும் காலம் (க்ஷவரத்திற்கு பின்பு)
  6. ஊண்பொழுது - சாப்பிடும் காலம் (உணவிற்கு முன்பு)
  7. வைகு துயிலொடு  - நீண்ட தூக்கத்திற்குப் பிறகு 
  8. இணைவிழைச்சு - உடல் உறவு ஆன பிறகு 
  9. கீழ்மக்கள் மெய்யுறல் - நீசர்களைத் தொடுங்கால் (தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள்  என்று பொருள் கொள்ள வேண்டும். தீண்டாமை என்று பொருள் படாது)
  10. மயலுறல் - மாலா, சலம் கழித்த பிறகு 


மேற்கூறிய பாத்து காலங்களிலும் (அதன் பிறகு) கண்டிப்பாக நீராட வேண்டும் என்பது சாத்திரம். சில சமயங்களில் குளிக்க முடியாதவர்கள் ஜலத்தை தலையில் தெளித்துக் கொள்வார்கள் (உடல் நலம் இல்லாதவர்கள்).

Wednesday, June 29, 2016

திருமந்திரத்தின் மணித் துளிகள்..

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே



தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

திருமூலர் ஞானம் ஒழுகப் பாடிய இந்தப் பாடலில், சிவ பெருமானைப் பலவாறாகப் போற்றி பாடுகின்றார். அதாவது இறைவன் ஆகிய சிவ பெருமான், தீயைக் காட்டிலும் வெப்பம் மிகுந்தவன், தண்ணீரைக் காட்டிலும் குளிர்ச்சி மிகுந்தவன் - ஆனாலும் அவனுடைய திருவளருளின் பெருமையை அறிவார் யாரும் இல்லை.  ஒரு சின்னக் குழந்தையை விட நல்ல மனம் கொண்டவன் - தன்னுடைய பக்தர்களுக்கு பெற்ற தாயை விட மேன்மை செய்யக் கூடியவன் சிவ பெருமான் என்று சிவ பெருமானின் பெருமைகளை தெள்ளு தமிழில் கோருகின்றார் நம் திருமூலர்.


மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

வேதச்   சிறப்பு 

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே

ஆகமச் சிறப்பு 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே

Tuesday, June 28, 2016

திருக்குறளின் மணி முத்துக்கள் (23)

கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உலகில் உள்ள மொழிகள் எல்லாமே அகாரம் அல்லது அ என்னும் எழுத்திலே தான் துடங்கும். (A,ALPHA,...). அதே போல், இந்த உலகம் ஆதி பகவான் ஆகிய ஆதித்யன் அல்லது ஸூர்யனையே ஒட்டி வாழும். இங்கு  ஆதி  பகவன் என்னும் சொல்  பல பொருள்கள் உடையது -


  1. ஆதி நாதன் என்ற ஜைன மதத்து தீர்த்தங்கரர்
  2. ஆதித்யன் என்ற சூர்யன்
  3. ஆதிப்பிரான் என்ற மஹா விஷ்ணு
  4. திரு வள்ளுவரின் தந்தை மற்றும் தாயின் பெயர்கள்

இவற்றில் எல்லாம் சூர்யன் மிகவும் பெருமை வாய்ந்தவன். ஏன் என்றால், இந்த உலகத்தைக் காப்பவன் என்பதால், சூர்யா நாராயணன் என்று பெயர். செடி கொடிகள் எல்லாம் தங்கள் உணவினை (கார்போஹைட்ரெட் என்ற மாவுப்பொருள்)  தயாரிப்பதற்கு ஹேதுவாக இருப்பவன் சூர்யன். இந்த உலகத்தில் உள்ள நரர்களை எல்லாம் உய்விப்பதினாலே தான் அவனுக்கு நாராயணன் என்ற சிறப்புப் பெயர். மஹா விஷ்ணுவுக்கு , காத்தல் தொழில், அதற்கு  இணையாக சூரியனுக்கும் இந்த உலகத்தைக்  காக்கும் தொழில் உள்ளது. (இரவு பகல், 4 காலங்கள் , உத்தராயணம், தட்சிணாயனம் எல்லாம் சூரியனுடைய  செயல்பாட்டினால் தான் என்பதால் தான் இங்கு நம் வள்ளுவர், சூரியனை ஒட்டியே இந்த உலகம் வாழ்கின்றது என்று சொல்கின்றார்.

வேதாந்தத்திலே , ஓம்காரத்திலே இருக்கும் அகரத்திற்கு (அ + உ + ம்  = ஓம்) ப்ரும்மத்தை கூறுவார்கள்.

வான் சிறப்பு (மழையின் பெருமை)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெரிய சமுத்திரம் கூட வற்றிக் காய்ந்து போய் விடும் - மழை பெய்யாமல் போய் விட்டால்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழையை ஆதாரமாகக் கொண்டு இந்த உலகம் இயங்கி வருவதால் தான், அந்த  மழையை சாகா வரம் தரம் அம்ருதம் என்று புகழப் படுகின்றது. பகவான் கீதையில் சொல்லும் பொழுதும்  , உணவு மழையில் இருந்தே உண்டாகின்றது என்று கூறுகின்றார். (அந்நாத்  பவந்தி பூதாநி
பர்ஜன்யராத் அன்ன சம்பவஹ)

நீத்தார் பெருமை (சந்யாசிகள் பெருமை)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

சந்யாசிகள் பெருமையைக் கூற வேண்டும் என்றால், இந்த உலகில் செத்துப் போனவர்களைக்   கணக்கு எடுத்த மாதிரி என்று சொல்கிறார் வள்ளுவர்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெரியார் என்றால் சந்யாசிகள். ஏன் என்றால், அவர்கள் பஞ்ச இந்திரியங்களையும்   அடக்கி, இந்த உலக வாழ்வைத் துறந்தவர்கள். ஆனால் சிறியவர்கள் அதிசயங்களை செய்ய இயலாதவர் . இங்கு பெரியார் என்றால் முற்றிலும் துறந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமி  இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கும் கிழவர்கள் எல்லாம் ஒரு போதும் பெரியர்வர்கள் ஆக முடியவே முடியாது. உதாரணத்திற்கு , கஞ்சிப்  பெரியவரைப் பெரியார் என்று சொன்னால் தகும். ஸ்வய மரியாதை இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இரட்டை வேடம் போடுபவர்கள் ஒருக்காலும்  பெரியார் என்ற சொல்லுக்கு அருகதை அற்றவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அறன்வலியுறுத்தல் 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

கோபம், பேராசை, பொறாமை, கொடுஞ்சொல் ஆகியவற்றைத்  தவிர்த்து இருப்பதே தர்மம் அல்லது அறம் எனப்படும்.

இல்வாழ்க்கை ( கிருஹஸ்த தர்மம்)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வாழ்க்கை துணை நலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

புதல்வரைப் பெறுதல் 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

அன்புடைமை 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உண்மையான அன்பிற்கு தாழ்ப்பாள் கிடையாது. தாம் நேசிப்பவர்க்கு ஒரு கஷ்டம் வரும் காலத்திலே, தம்மையே அறியாமல் கண்ணீர் வந்து விடும்   - அதுவே அன்பின் தன்மை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு உடையவர்கள் தங்களுடைய எலும்பும் கூட பிறர்க்குத் தானம் செய்வார்களாம். ஆனால் அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்காக வைத்துக் கொள்வார்களாம். இங்கு வள்ளுவர் ததீசி முனிவரின் கதையை நமக்குச் சொல்கின்றார். இந்திரனுக்கு வ்ருத்ரன் என்ற அசுரனைக் கொல்ல, வஜ்ராயுதம் என்னும் ஆயுதம் வைரம் பாய்ந்த எலும்பைக் கொண்ட ஒரு மனிதனின் முதுகு எலும்பால் செய்ய வேண்டும் என்பது அந்த அசுரன் பெற்ற வரம். அதற்காக, ததீசி மஹரிஷி, இறைவனைக் கோரி, தான் உயிரை நீத்தார் (நைமிசாரண்யம் என்னும் இடத்திலே). அதன் பிறகு, அவருடைய முதுகுத்த  தாண்டினால் வஜ்ராயுதம் செய்து விருத்திரன் என்ற அசுரனைக் கொன்றான் இந்திரன். இப்பொழுது புரிந்ததா? வள்ளுவர் சாஸ்திர மற்றும் புராண விஷயங்களை மிகவும் அழகாகக்  கொடுத்திருக்கிறார்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

தர்மத்திற்க்கே அன்பு , மூலம் என்று நினைப்பார்கள். ஆனால் வீரத்திற்கும் அன்பே மூலம் என்று புரிந்து கொல்ல வேண்டும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாத புழுவினை வெய்யில் எப்படிச் சுட்டு இருக்குமோ, அப்படித் தான் தர்மம் அன்பு இல்லாதவர்களை சுட்டு எரித்து விடும்.

விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

இனியவை கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பழுத்த பழம் போல இனிய சொற்கள் இருக்கும் பொழுது , கனியாத காயைப் போன்ற சுடுசொற்களைச் சொல்லுதல் கூடாது.  நம்முடைய  அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படக் கூடிய ஒரு திருக்குறள்.

Wednesday, June 22, 2016

ஜோதிடப் பழமொழிகள் - (20)


  1. பரணியில் பிறந்தோர் தரணியை ஆள்வர்.
  2. சித்திரை அப்பன் தெருவிலே.
  3. பூராடத்திற்கு நூல் ஆடாது.
  4. பொன்  கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
  5. சனிப் பிணம் தனிப் போகாது.
  6. மூலத்து  மாமியார் மூலையிலே.
  7. ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே.
  8. ஆனி மூலம் அரசாளும்  பின் மூலம் நிர்மூலம்.
  9. ஹஸ்தத்து அப்பன் இடுப்பு  வரைக்கும்..
  10. அவிட்டம்  தவிட்டுப் பானையில் பணம். 
  11. கேட்டை  நக்ஷத்ரம்  ஜ்யேஷ்டனுக்கு  ஆகாது.
  12. சனியைப் போலே குடுக்கிறவனும் இல்லை கெடுக்கிறவனும் இல்லை.
  13. குரு பார்க்க கோடி நன்மை.
  14. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக் கூடாது.
Proverbs on Thamizh Months

  1. மாதங்களில் சிறந்தது மார்கழி.
  2. ஐப்பசியில் அடை மழை.
  3. கார்திகைக்கப்புறம் மழையும்   இல்லை கர்ணனுக்கப்புறம் கொடையும் இல்லை.
  4. தை பிறந்தால் வழி பிறக்கும்.
  5. ஆடிப்பட்டம் தேடி விதை.
  6. ஆடிக் காத்தில் அம்மியே பறக்கும்.

Monday, June 20, 2016

பழமொழித் திரட்டு - V (50)

  1. இல்லாதவர் பொல்லாதவர்.
  2. ஆளு விலை கல்லு விலை.
  3. கடலில் பெருங்கயதைக் கரைதார்ப் போலே.
  4. நாலு மலை ஒரே இடத்தில இருக்கலாம். ஆனால் நாலு முலை ஒரே இடத்தில இருக்கவே முடியாது. 
  5. தூங்கற புலியைத் தட்டி எழுப்பின மாரி.
  6. மலையில விளைஞ்சால்  மாகாணி நிலத்திலே விளைஞ்சால் நன்னாரி.
  7. பழிக்குப் பழி.
  8. இல்லறம் அல்லது நல்லறம் அல்ல.
  9. தும்பை விட்டு விட்டு தலையைப் பிடிக்கறது.
  10. கைக்கு எட்டினது வாயிக்கு எட்ட வில்லை.
  11. எதிரியை மன்னி அனால் மறக்காதே.
  12. களவும் கற்று மற.
  13. நாலு காசு இல்லாட்டி நாயும் கூட மதிக்காது.
  14. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை.
  15. கள்ளனுக்கே காஞ்சி கொடுத்தவன்.
  16. காளை மட்டிலேயே பால் கரப்பான்.
  17. பானம்,பரதாரம்,ஹத்தி (கொலை), ஹிம்சை, திருட்டு இவை ஆயிண்டும் பஞ்ச மஹாபாதகங்கள்.
  18. மூக்காலே அழுதான்.
  19. புகையற விறகு  புறத்திலே(வெளியிலே).
  20. சூடு கொண்ட பூனை அடுப்பிலே ஏறாது.
  21. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. 
  22. ஊரான் வீட்டு நெய்யே ! என் ப்ன்டாட்டி கையே!
  23. வயிறு முட்டச் சோறு போட்டுட்டு வயித்திலே குத்தின மாரி!
  24. தூங்கறவனை எழுப்பலாம். தூங்கற மாரி நடிக்கரவனை எழுப்பவே முடியாது.
  25. பீயைக் கண்ட நாயை மாரி.
  26. எந்தப் புதுக்குள்ளே எந்தப் பாம்புன்னு யாருக்குத் தெரியும்?
  27. பாம்புப் புதுக்குள்ளே கையை விட்டால் கடிக்காமல் விடாது.
  28. தோளுக்கு மிஞ்சினாத் தோழன்.
  29. குட்டி ஞானம் குடியைக் கெடுக்கும்.
  30. குளத்தில் குசு விட்ட மாறி.
  31. சிற்றிடை மலர்ந்த செங்கமலம் போலே
  32. உடம்பு முழுக்க முள்ளாக இருந்தாலும் ரோஜா பூ அழகு 
  33. பாலை வனத்திலே நீரோடை போலே 
  34. குனியாக் குனியாக் குட்டுவார்கள்.
  35. ஓடற பாம்பு மேலே கல்லை விட்டு எரிஞ்சு மாரி.
  36. தாமரை இலை மேல் தண்ணீர் போலே.
  37. பாசத்துல ஊசி கூடின மாரி
  38. உடுத்திக் கேட்டான் பார்ப்பான் உண்டு கேட்டான் வெள்ளாளன்.
  39. சித்தம் போக்கு சிவன் போக்கு.
  40. அலை ஓஞ்சு ஸ்நானம் பண்ணினா மாரி.
  41. முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாய்க்கணும் பட்டணத்துக்கு தான் லாயக்கு.
  42. வாத்தியார் பையன் மக்கு.
  43. பால ஜோசியனும் விருத்த வைத்தியனும் தான் நல்லது.
  44. கடலிலே கரைத்த பெருங்காயம்  மாரி.
  45. அங்காடியில் தோத்தால் அம்மா கிட்டயா கட்டறது?
  46. கீரியும் பாம்பும் போலே 
  47. நாரதர் கலகம் நல்லதிலே தான் முடியும்.
  48. குண்டாகி சட்டியில் குதிரை ஓட்டுகிறான்.
  49. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே நடந்து போல.
  50. பழம் நழுவி பாலில் விழுந்த மாரி.

பழமொழித் திரட்டு - IV (50)


  1. சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குத் தான் வாய் வலிக்கும்.
  2. சூரியனைக் கை கொண்டு மறைக்க முடியுமா?
  3. குருடர்கள் சேர்ந்து யானையைப் பார்த்தாப் போலே.
  4. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
  5. ஒன்றே குளம் ஒருவனே தேவன்.
  6. அன்பே சிவம்.
  7. சும்மா இருப்பதே சிவம்.
  8. வீட்டுக்கு அடங்காதவன் நாட்டுக்கு அடங்குவான்.
  9. அம்மா அழ அழச் சொல்லுவாள். ஊரு சிரிக்கச்  சிரிக்கச் சொல்லும்.
  10. தானத்தில் சிறந்தது அன்னதானம்.
  11. பாழானது பசுவின் வயிற்றிலே.
  12. சாப்பிடும் முன் காக்கைக்குக் கொடு. சாப்பிட்டு விட்டு நாயிக்குக் கொடு.
  13. பூனை வந்து குட்டி போடணம். நாய் போய்க்  குட்டி போடணம்.
  14. இன்றைக்கு இருப்பவர்களை நாளைக்குக் காணவில்லை.
  15. இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால்.
  16. ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  17. எரியிற தீயில் எண்ணெய் ஊற்றின மாரி.
  18. பட்ட புண்ணிலே படும். சுட்ட புண்ணிலே சுடும்.
  19. பதறாத காரியம் சிதறாது.
  20. நான் புடிச்ச முயலுக்கு மூணு காது.
  21. காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.
  22. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  23. வெளுத்ததெல்லாம் பால் அல்ல.
  24. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
  25. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  26. முடி மன்னரும் பிடி சாம்பல்.
  27. மடியிலே கனமில்லை. வழியிலே பயமில்லை.
  28. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  29. யானை இருந்தாலும்  ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்  பொன்.
  30. பணம் இல்லாதவன் பிணத்துக்கு ஒப்பு.
  31. பூனையை மடியிலே கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கற மாரி.
  32. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
  33. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்.
  34. இனம் இனத்தோடு சேரும்.
  35. குரைக்கர நாய் கடிக்காது.
  36. பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி.
  37. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  38. எய்தவனை விட்டு விட்டு அம்பைக்  கடிவதேன்?
  39. குற்றமுள்ள நெஞ்சம்   குறுகுறுக்கும்.
  40. ஆபத்துக்குப் பாவம் இல்லை.
  41. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?
  42. பணம் பாதாளம் வரைக்கும் பாயும்.
  43. பட்ட காலிலே படும். கேட்ட குடியே கெடும்.
  44. துங்கரவனை எழுப்பி சோறு இல்லைன்னு சொன்ன மாரி.
  45. சிறுகக் கட்டிப் பெருக வாழ வேண்டும்.
  46. சுத்தம் சுகம் தரும்.
  47. உடம்பை உறுதி செய்.
  48. உள்ளத்தில் உறுதி வேண்டும்.
  49. வாயில் இருந்து போன வாக்கையும் வில்லில் இருந்து போன அம்பையும் திரும்ப   எடுக்க முடியாது.
  50. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.

Sunday, June 19, 2016

பழமொழித் திரட்டு - III (50)


  1. முயற்சி திருவினை ஆக்கும்.
  2. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.
  3. மாதா பிதா குரு தெய்வம்.
  4. உள்ளங்கை நெல்லிக்கனி என .
  5. இலை மறை காய்  போலே.
  6. அஞ்சு பொண்ணுப் பெத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
  7. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
  8. முள்ளை முள்ளால எடுக்கணும்.
  9. க்ஷத்ரியன் அகணும்ன்னா  முதலில் சாணக்யன் ஆகணும்.
  10. வெச்சால்  குடுமி சரைச்சா மொட்டை.
  11. அரங்கத்தில் ஆடித் தான் அம்பலத்தில் ஆட வேண்டும்.
  12. மருந்துக்கு மள்ளுக் கேட்டால் பொண்டாட்டியைக் கேட்டுட்டுத் தரேன்னானம்.
  13. தனி மரம் தோப்பாகாது.
  14. பாத்திரத்தில் இருந்தாத் தான் கரண்டியிலே வரும்.
  15. நாயை அடிப்பானேன் பீயை சுமப்பானேன்
  16. கோமணத்தைக்  கொடுத்துப் புதைப்பை  வாங்கிக் கொண்ட மாரி.
  17. பாம்பறியும் பாம்பின் கால்.
  18. காற்றுள்ள போதே தூற்றிகொள்.
  19. பொறுத்தார் பூமி ஆள்வார்.
  20. பொறுமையே பெருமை.
  21. மின்னரதெல்லாம் பொன்னல்ல.
  22. கெடுவான் கேடு நினைப்பான். 
  23. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
  24. குடுக்கிற தெய்வம் கூரையைக் பிச்சுட்டுக் குடுக்கும்.
  25. பிடிக்காத பெண்டாட்டி கைப்  பட்டாக்  குத்தம் கால் பட்டாக் குத்தம்.
  26. ஆட்டுத் தோல் போத்திய புலி.
  27. பசு மரத்தாணி போல.
  28. யானைக்கு  அர்ரம்ன்னா  குதிரைக்கு  குர்ரம்.
  29. ஆசை தோசை அப்பளம் வடை.
  30. வெட்டொண்ணு துண்டு ரெண்டு.
  31. ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய்.
  32. காயக்கர மரத்திலே தான் கல்லடி விழுகும்.
  33. நக்கற மாடு மேயற மட்டைக்  கெடுதத்து.
  34. திக்கற்றவருக்கு  தெய்வமே துணை.
  35. காரியம் ஆகற வரைக்கும் காலைப் பிடி. காரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடி.
  36. வீண் வம்புக்குப் போஹா மாட்டான். வந்த வம்பை விட மாட்டான்.
  37. அகலக் கால் வைக்காதே.
  38. ஆசை தீர அணைச்சவனும் இல்லே. அழுக்குத் தீரக் குளிச்சவனும் இல்லே.
  39. உரலில் தலையைக் குடுத்துட்டு இடிக்கி பயந்தா எப்படி?
  40. செருப்பையும் குடுத்து அடியையும் வாங்கீண்ட மாதிரி.
  41. ஆவணிஅவிட்டதுக்கு அசடும் சமைக்கும்.
  42. பாவி போன இடம் பாதாளம்.
  43. ராமேஸ்வரத்துக்குப் போனாலும் சனீச்வரம் விடாது.
  44. கல்யாணமும் இல்லே ஆம்படயானும் இல்லே பய்யன் பேரு சோமலிங்கம்.
  45. ஆடிக் கடிச்சு மட்டைக் கடிச்சு மனுஷனையே கடிச்ச மாரி
  46. வேணும்ன்னால் பலா வேரிலேயும் காய்க்கும்.
  47. பிள்ளையார் பிடிக்கப் போய் கொரங்காசு.
  48. பூவுடன்சேர்ந்த நாறும் மணப்பது போல.
  49. சோறு கண்ட இடமே சுவர்க்கம். கஞ்சி கண்ட இடமே கைலாசம்.
  50. கழுதை  விட்டை கை நிறைய.

சம்ஸ்கிருதப் பழமொழிகள் திரட்டு (50)

  1. दन्डम् दश गुणम् भवेद्  | - தண்டம்  தஷ  குணம்  பவேத்.
  2. क्रुषितोनस्ति दुर्भिक्शम् । - க்ருஷிதோநாஸ்தி   துர்பிக்ஷம்.
  3. धर्मो रक्षति रक्षित: ।  தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
  4. विनश काले विपरीध बुद्धि ।  வினாஷ  காலே  விபரீத  புத்தி.
  5. बालनाम् रोधनम् फलम् ।  பாலனாம்  ரோதனம்  பலம். 
  6. यथा राजा तथा प्रजा।  யதா  ராஜா  ததா  பிரஜா.
  7. यत्र धूमो तत्र वह्नि:।  யத்ர  தூமோ தத்ர  வஹ்னி.
  8. अन्नम् परप्ब्रह्म स्वरूपम् ।  அன்னம் பரப்ரம்ம ஸ்வரூபம்.
  9. मानस सेवा माधव सेवा । மானச  சேவா  மாதவ  சேவா. 
  10. परान्नम् परम संकटम् |  பரான்னம் பரம சங்கடம்.
  11. मौनम् सम्मति लक्षणम् । மௌனம் சம்மதி லக்ஷணம்.
  12. वज्रम् वज्रेण भिन्यते। வஜ்ரம்  வஜ்ரேண பின்யதே.
  13. अन्नदात सुखीभव | அன்னதாத  சுகீபவ.
  14. आलस्यात् अम्रुतं विशं । ஆலச்யாத் அம்ருதம் விஷம்.
  15. मौनं विध्वानु भूषणं | மௌனம் வித்வானு பூஷணம்.
  16. मौनं मन्धानु भूषणं | மௌனம் மந்தானு பூஷணம்.
  17. संपाद्यं पुरुष लक्षणं | सौन्दर्यम् स्त्री लक्षणम् | சம்பாத்யம் புருஷ லக்ஷணம் . சௌந்தர்யம் ஸ்திரீ லக்ஷணம்.
  18. अजापुथ्रम् बलिम् दाद्यात्  | அஜாபுத்ரம் பலிம் தாத்யாத் .
  19. व्रुध्ध नरी पथिव्रुथा - விருத்த நாரீபத்ரிவ்ருதா. 
  20. रूपवथि भार्या शत्रु  -ரூபவதி பார்யா சத்ரு.
  21. अहिंसा परमो धर्म:அஹிம்சா  பரமோ  தர்ம :
  22. ओउशदम् जह्नवि तोयम् वैध्यो नरयनो हरि: ஒளஷதம்  ஜஹனாவி  தோயம்  வைத்தியோ  நாராயனோ  ஹரி 
  23. जीवेत शरदः शतम्। ஜீவிதா      சாராத  சாதம் .
  24. नदीनां सागरो गतिः நதியினாம்    சாகரோ  கதிஹ்  
  25. शुभस्य शीघ्रं ஷுபஸ்ய  சீக்ரம்  
  26. श्रद्धावान् लभते ज्ञानं  - ஷ்ரத்தாவான்  லபதே    ஞானம்  
  27. सर्वे गुणाः काञ्चनमाश्रयन्ते - சர்வே  குணாஹ்  காஜிஞ்சனமாஸ்ரயன்ட் 
  28. शरीरमाद्यं खलु धर्मसाधनम् - சரீரமாதியம்    காலு  தர்மசாதனம் 
  29. सर्वे जनाः सुखिनो भवन्तु - சர்வே  ஜனா   சுகினோ   பாவந்து 
  30. वचने किं दरिद्रता - வச்சானே    கிம்  தரித்ரதா  
  31. अर्थस्य पुरुषो दासः அர்த்தஸ்ய  புருஷஹா  தாஸஹ்
  32. धर्मेण हीनाः पशुभिः समानाः - தர்மஸ்ய ஹினாக  பஸூபீ  சமானாஹ் 
  33. जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी - ஜனனி ஜென்மபுயூமிஸ்ச்ச  ஸ்வர்காதாபி    கரியசி 
  34. जन्तूनां नरजन्म दुर्लभं ஐந்துநாம் நரஜ்னம் a துர்லபம். 
  35. एकं सत् विप्राः बहुढा वदन्ति - ஏகம்  சட் விப்ரா   பஹுதா  வதந்தி 
  36. उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत - உதிஸ்ததா     ஜாக்ராட  ப்ராப்ய  வரணிபாதத  
  37. कुर्यात् सदा मङ्गलं - குர்யாத்  சதா  மங்களம் 
  38. परोपदेशे पाण्डित्यम् - பரோபதேசே  பாண்டித்தியம்
  39. पयःपानं भुजङ्गानाम् केवलं विषवर्धनम् - பயபானம்  புஜங்கானாம்  கேவலம்  விஷ்வர்தனம் 
  40. मौनं सर्वार्थसाधनम् - மௌனம்  சார்வார்த்தசாதனம் 
வேத வாக்கியங்கள் :
  1. मात्रु देवो भव : மாத்ரு  தேவோ  பவ:
  2. पित्रु देवो भव: பித்ரு  தேவோ  பவ:
  3. आचार्य देवो भव : ஆசார்ய  தேவோ  பவ:
  4. अथिथि देवो भव: அதிதி  தேவோ  பவ :
  5. अन्नाद् जायन्ति भुतानि : அன்னாத்  ஜாயந்தி    பூதானி.
  6. अन्नात् अनिन्द्यात् । அன்னாத்   அனிந்த்யாத்.
  7. जतान् यन्नेन वर्धन्ते : ஜாதான்  யன்நேன  வர்தந்தே.
  8. सत्यम् वद । धर्मम् चर। சத்யம் வத தர்மம் சர.
  9. सत्यमेव जयते । சத்யமேவ  ஜெயதே.
  10. सत्यम् ज्ञानम् अनन्तम् ब्रह्मा  - சத்யம்  ஞானம்  ஆனந்தம்  ப்ரஹ்மா.

Friday, June 17, 2016

பழமொழித் திரட்டு - II (90)

  1. அற்பதுக்குப் பணம் படிச்சால் அர்தரதிரி குடை பிடிக்கும்.
  2. சந்து கிடைச்சா சிந்து படுவான்.
  3. அவில்ன்னு நினைச்சு உமியை மெல்லரான்.
  4. சித்திரமும் கைப்பழக்கம் 
  5. அரைச்ச மாவையே அரைக்கற மாதுரி
  6. தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் 
  7. வீட்டைக் கட்டிப் பாரு கல்யாணத்தைப் பண்ணிப் பாரு
  8. பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்
  9. பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு
  10. கொல்லன் தெருவிலே ஊசி விக்கறதா ?
  11. ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டி.
  12. அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும்  என்ன சம்பந்தம் ?
  13. மொட்டைத் தலைக்கும் முழம்காலுக்கும் முடிச்சுப் போட்டனாம் 
  14. குருடனைப் பார்த்து ராஜபார்வை பார்க்கச் சொன்ன எப்படி?
  15. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
  16. சிவா பூஜையிலே கரடி புகுந்த மாரி.
  17. கறந்த பாலும் எச்சிலே  பிறந்த பிள்ளையும் எச்சிலே  .
  18. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது.
  19. பனை மரத்துக்கடியில் நின்று பாலைக் குடித்தாலும் கள்ளு என்பார்கள்.
  20. சவத்தில் குத்தாதே.
  21. செத்துப் போனவனுக்கு ஜாதகம் பார்த்தானாம்.
  22. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
  23. மரம் வைத்தவன் தண்ணீர் உற்றுவான்.
  24. மாட்டைக் கொன்னுட்டு செருப்பு தானம் கொடுத்தானாம்.
  25. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
  26. ஆடு நனயிதேன்னு ஓநாய் அழுகுதாம்.
  27. பாத்தாப் பூனை பாஞ்சாப்  புலி.
  28. வெட்டிக்கொண்டு வான்னா  கட்டிக்கொண்டு வருவான்.
  29. பிள்ளையும் கிள்ளி விட்டிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டானாம்.
  30. ஆத்தில் ஒரு கால் சேத்தில் ஒரு கால்.
  31. மீன் வாயிலே தப்பி முதலை வாயிலே மாட்டிக்கொண்ட மாரி.
  32. ஐயோ பாவம் என்றால் ஆறு மாசத்துப் பாவம் வந்து விடும்.
  33. செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி.
  34. எறும்பூரக் கல்லும் தேயும்.
  35. சிறு துளி பெருவெள்ளம்.
  36. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆச்சு.
  37. உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சு.
  38. கல்லேறு கொண்டாலும் கண்ணேறு கொள்ளாதே.
  39. கொள்ளிக் கட்டை எடுத்து தலையை சொரிஞ்சாப் போலே 
  40. ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும்.
  41. சாட்சிக்காரன் காலிலே விழுவதை விடச் சண்டைக் காரன் காலிலே விழுவது மேல்.
  42. குரங்கு கையில் பூமாலை கிடைத்தது  போல.
  43. நாயிக்கு முழுத்தேங்காய் கிடைத்தது போலே. 
  44. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  45. நாயைக் குளுப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைச் சுருட்டிக் கொண்டு பீயைத் திங்கும்.
  46. குள்ளநரியின் கண்ணு கோழிக் கூட்டிலே.
  47. காக்கா கூவி பொழுது விடிஞ்சாப் போலே.
  48. தாயிக்குத் தாலி செஞ்சா கால் பொன்னில் மாப்பொன்  திருடுவான் தட்டான்.
  49. தானம் வாங்கற மாட்டை காதைப் பிடிச்சுப் பார்த்தானாம்.
  50. அழுக்கு தீரக் குளிச்சவனும் இல்லை பசி தீரத் தின்னவனும் இல்லை 
  51. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப்பணம்.
  52. விஸ்வாமித்ரர் வாயிலேயே ப்ரும்மரிஷிப் பட்டம்.
  53. பூச்சி பூச்சி  என்றால்  புழுக்கை தலை மேல் ஏறும்.
  54. கிளியை வளத்துப் பூனை கையிலே கொடுத்த மாரி.
  55. விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சவுடன் சீதைக்கு ராவணன் சித்தப்பா.
  56. சுக்குக் கண்ட இடத்திலே புள்ளைப் பெக்கறாள்.
  57. அடிக்கிற கை தான் அணைக்கும்.
  58. ஆடிப் பட்டம் தேடி விதை.
  59. சீப்பை ஒளிச்சி வெச்சால் கல்யணம் நிக்குமோ?
  60. பருப்பு இல்லாத கல்யாணமா?
  61. பொன்னை வெக்கற  இடத்திலே பூவை வெக்கணம்.
  62. நெருப்பிலாமல் புகையாது.
  63. ஆயிரம் முறை போயிச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தணும்.
  64. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிறு.
  65. வாய்மையே வெல்லும்.
  66. ஆடிக் காத்திலே அம்மியும் பறக்கும்.
  67. கார்த்திகைக் கப்புறம் மழையும் இல்லை கர்ணனுக்கப்புரம் கொடையும் இல்லை.
  68. பால சாபம் காலைப் பிடித்தாலும் போகாது.
  69. அழுகற ஆணையம் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே.
  70. கருத்த பாப்பானையும்  வெளுத்த பறையனையும் நம்பாதே.
  71. அழுகற பிள்ளைக்குத் தான் பால்.
  72. விளக்கெரிஞ்ச  வீடும் பிள்ளைப் பெத்த வீடும் வீண் போகாது.
  73. புலி பசித்தாலும் புல்லைத் திங்காது.
  74. எள்ளுன்னா எண்ணெய்  இறக்குவான்.
  75. காற்றைக் கயிராத் திரிப்பான்.
  76. ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சரச்சனாம்.
  77. மீன் குட்டிக்கு நீந்தச் சொல்லித் தரணமா என்ன ?  
  78. நெருப்பென்றால் வாய் சுடாது.
  79. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.
  80. சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டான்.
  81. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  82. நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது  சாக்கு.
  83. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
  84. ஆண்டிகள் கூடி மடம் கட்டின  மாறி.
  85. நோகாமல் நோன்பு கூம்பிடனும்ன்னா முடியுமா?
  86. தோல்வியே வெற்றிக்கு முதற் படி.
  87. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
  88. ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்புமா?
  89. வித்து குணம் பாத்து குணம்.
  90. ஆழம்  தெரியாமல்  காலை  விடாதே.

பழமொழித் திரட்டு - I (42)


  1. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி. 
  2. இரைக்கர  கிணற்றில் தான் ஊரும்.
  3. குடுத்து வைச்சாத் தான் கிடைக்கும்.
  4. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தல் தன பிள்ளை தானாக  வளரும்.     
  5. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட மாதுரி.
  6. எச்சில் கையிலே ஈ ஓட்ட மாட்டான்.
  7. நூலைப் போலே சேலை. தாயைப் போலே பிள்ளை.
  8. அறுத்த கைக்கு உப்புத் தர மாட்டான்.
  9. வீட்டுக்கு வீடு வாசப்படி
  10. அக்கறைக்கு இக்கறை பச்சை.
  11. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
  12. குந்துமணி குப்பையில் கிண்டந்தாலும் நிறம் மாறாது.
  13. ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் பருந்து  ஆகாது. 
  14. திணை விதைச்சா திணை விளையும் வினை விதைச்சா வினை வளரும்.
  15. மொச்சை அவரை  நாட்டால்  எப்படி நாட்டவரை முளைக்கும் ?
  16. பெண் புத்தி பின் புத்தி.
  17. ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே!
  18. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  19. தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளை.
  20. காக்கைக்குத் தன குஞ்சு பொன் குஞ்சு.
  21. நுணலும் தன் வாயால் கெடும்.
  22. தனக்குத் தனக்கென்றால்  கொழக்கட்டை பெருசு.
  23. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
  24. உரலுக்கு ஒருபக்கம் இடி ! மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி!
  25. ஊட்டிக் குடுக்கிற சோறும் சொல்லிக் குடுக்கிற புத்தியும் ரொம்ப நாள் நிலைக்காது.
  26. வளர்த்த கடாய் மாரிலே பாஞ்ச மாதிரி.
  27. ஊமை ஊரைக் கெடுக்கும்.
  28. அசட்டுக்கு ஆங்காரம் செட்டுக்கு குனுஷ்டு.
  29. அடி மேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்.
  30. ஆழாக்கு அரிசி ஆனாலும்  மூணு அடுப்புக் கல்லு வேணும்.
  31. தலை இருக்க வால் ஆடலாமா?
  32. மதில் மேல் பூனை மாதிரி.
  33. பேளாதவன்   பேண்டால் பீஎடுதுத் திருவிழா.
  34. அள்ளாமல் குறையாது கிள்ளாமல் வலிக்காது.
  35. மச்சான் செத்தால் மயிராச்சு கம்பளி  நமக்காச்சு.
  36. கம்பளி வேண்டாம் கட்டு விட்டால் போதும் .
  37. இன்னைக்கு செத்தால் நாளைக்குப் பால்.
  38. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதாம்.
  39. தலைக்கு வந்தது தலைப்பாகைஓடப்   போச்சு.
  40. ஊர்வசி சாபம் உபகாரம் ஆச்சு.
  41. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
  42. சீலை மேல் முள் விழுந்தாலும் முள்ளு மேல் சீலை விழுந்தாலும் கேடு சீலைக்குத் தான்.

Thursday, June 16, 2016

பழமொழித் திரட்டு - IV (40)


  1. காது  இல்லதவன்   ராஜ்யத்திலே  கழுதைக் (donkey) காதன்   ராஜா.
  2. மூக்கு  இல்லாதவன்  ராஜ்யத்திலே  மொண்ணை  மூக்கன்  ராஜா. 
  3. துப்புக் கெட்ட  கிழவனுக்கு  ரெட்டைத்  தீவெட்டி.   
  4. ஆடத் தெரியாதத் தேவிடியளுக்கு  மேடை  கோனை.
  5. கழுநீர்ல  கை  அலம்பின  மாதிரி. 
  6. பிச்சை  எடுத்தான்  பெருமாளு  பிடுங்கி  திண்ணன்  அனுமாரு.
  7. மாடு  இளைச்சாலும்  கொம்பு  இளைக்காது.
  8. கீழே  விழுந்தேன்  ஆனா  மீசைல  மண்   ஓட்டலை.
  9. யானை இளைச்சா  தொழுவத்தில் கட்ட முடியுமா ?.
  10. யானைக்கும் அடி சறுக்கும்.
  11. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் நகராது.
  12. சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  13. சிக்கனமும் கைப் பழக்கம். 
  14. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
  15. ஆத்திலே கொட்டினாலும் அளந்து கொட்டு.
  16. பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
  17. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
  18. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  19. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  20. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதுரி.
  21. பட்டிக்காட்டான் மிட்டயிக் கடையைக் கண்ட மாதிரி.
  22. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.
  23. கண்ணை மூடிக் கொண்டு பால் குடிச்சால் யாரும் பார்க்க மாட்டங்கன்னு நினைச்சுதாம் பூனை.
  24. அரசனும் ஆண்டி ஆவான்.
  25. ஆக்கப் பொருதவன் ஆரப் போருக்க மாட்டான்.
  26. வேலிக்கு ஓணான் சாட்சி.
  27. வேலியே பயிரை மேஞ்சால் எப்படி ?
  28. ஆட்டுக்கு வால் அளந்து தான் வெச்சிருக்கான்.
  29. உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.
  30. அழுதாலும் புல்லை அவ தான் பெக்கணம்.
  31. தனக்குத் தானும் பிரைககுத் தூணும். 
  32. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயரும் வேறு தான்.
  33. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  34. இளம்கன்று பயம் அறியாது.  
  35. போன மச்சான் திரும்பி வந்தான்.
  36. தேவிடியா வேட்டிலே பய்யன் பிறந்த மாதிரி.
  37. மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிரு.
  38. கழுவின மீனிலே நழுவின மீன் மாதுரி.
  39. விருந்தும் மருந்தும் மூன்று நாள்  மட்டுமே.
  40. வாயிலே விரலை வைத்தால் கூடக்  கடிக்க மாட்டான்.

பழமொழித் திரட்டு- III (40)


  1. தலைக்கு வந்தது தலைப்பகைஒடப் போச்சு.
  2. ஊர்வசி சாபம் உபஹாரம் ஆச்சு. 
  3. தாய்ப் புலி எட்டடி பாஞ்சால் குட்டிப்புலி பதினாறு அடி பாயும். 
  4. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கலாம் எலி சூடு போட்டுக்கலாமா ?
  5. முதலியார் ஜம்பம் விளக்கு எண்ணெய்க்குக் கேடு.
  6. அளந்த படி அட்டாரிலே!
  7. (சர்க்கரை)ஆலை  இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
  8. பணம்ன்னாப்  பொணம் கூட வாயைத் திறக்கும்.
  9. பசி வெட்கம் அறியாது.
  10. பணம் பத்தும் செய்யும் 
  11. ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 
  12. பாலம் கடக்கர வரைக்கும் நாராயணா   அதுக்கப்புறம் கூரயணா.
  13. படுக்க இடம் கொடுத்தாப் பாய் கேப்பான்.
  14. அரசனை நம்பி புருஷனை விட்ட மாதுரி.
  15. இருக்கறதை  விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்கற மாதுரி.
  16. சுவர் இருந்தாத் தான் சித்திரம் .
  17. முத்தத்து முல்லைக்கு மனம் இல்லை. 
  18. கழுதை  அறியுமோ கற்பூர வாசனை. 
  19. ஆறு நிறையத் தண்ணி போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும். 
  20. நாய் வாலை நிமித்த முடியாது.
  21. திருப்பதியிலே போய் சொறியன் காலிலே விழுந்த மாதுரி 
  22. கத்தி இல்லாமல் சரைக்கப் போன மாதுரி.
  23. தலைக்கு மேல தண்ணி போயாச்சு இனி ஜாண் நனைந்தா என்ன முழம் நனைந்தா என்ன ?
  24. ஆள் பாதி ஆடை பாதி.
  25. குறை குடம் தெளும்பும் நிறை குடம் தெளும்பது.
  26. நகம் கெட்டால் சுகம் கெடும்.
  27. பல் போனால் சொல் போச்சு. 
  28. ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  29. பார்வை போனப்பறம் சூரிய நமஸ்காரம் பண்ணின மாதுரி.
  30. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  31. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. 
  32. ஆணை அடிச்சு வளத்தணும் பொண்ணைப் பூத்தி வளத்தணும்  
  33. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  34. எழுதின ஒலைக்குத் தான் பழுது.
  35. அரிசியும் கொண்டு அக்காள் அகத்துக்குப் போன மாதுரி.
  36. பக்கத்துக் வீட்டுக்காரிக்குப் பட்டுப் புடவையைக் குடுத்துட்டுப் பலஹயைத் தூக்கிட்டு. பின்னாலையே ஓடின மாதிரி.
  37. ஊமைக்கு உளறு வாயன் சர்வக்னன்.
  38. போகாத உறவும் கேட்காத கடனும் கெடும்.
  39. ஊர் வாயை அடக்க முடியாது.
  40. நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயும்.

Sunday, June 12, 2016

பழமொழித் திரட்டு - II (30)

  1. பாத்திரம் நக்கி வீட்டில் ஒரு தொன்னை / கரண்டி நக்கி.
  2. ஆசை அறுவது நாள் மோஹம்  முப்பது நாள்.
  3. எரியறதைப் பிடுங்கினால் கொத்திகறது நின்று விடும் .
  4. அடி செய்யறதை அண்ணன் தம்பி கூட செய்ய மாட்டான்.
  5. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .
  6. அசட்டுக்கு ஆங்காரம் செவிட்டுக்கு குனுஷ்டு .
  7. கிடக்கறது  எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் துக்கி மடியில வை. 
  8. வர வர மாமியார் கழுதே போலே.
  9. ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம் அதிலேயும் சித்த அக்கிலிப்பிக்கிலி.
  10. அரச மரத்தைச் சுத்தி வரதுக்குள்ளே அடிவயதைத் தொட்டுப் பார்த்தாளாம் !
  11. கஞ்சிக்குச் சுக்குப் போட்ட மாதுரி .
  12. கடைத் தேங்காயை வழிப் புள்ளயாருக்கு ஒட்ச மாதுரி. 
  13. மானத்தைப் பார்த்தால் மாரு முட்டும் சோறு.
  14. நாய்க்கு   வேலை இல்லை ஆனால் நிக்க நேரம் இல்லை. 
  15. எள்ளு எண்ணெய்க்குக் காயணம் எலிப்புழுக்கை எதுக்குக்  காயணம் ? 
  16. பேண்டவனை வெட்டச் சொன்னாப் பீயை வெட்டரான்.
  17. நாயைக் கூப்படர நேரதிலேப் பீயை வழிச்சு எரிஞ்சுடலாம்.
  18. நாற்பது வயசுலே நாய் குணம். 
  19. குதிரை காய்ந்தால் தானாக வந்து  வைக்கோல் திங்கும் !
  20. திரும்பவும் வேதாளம் முருங்கமரம் ஏறியாச்சு! 
  21. பறைச்சி பனை மட்டை மேல ஒண்ணுக்கு அடிச்சா மாதுரி! 
  22. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  23. நின்ன எடத்திலேயும்   கல்லு  நிலத்திலேயும் குழி .
  24. பேய்ந்தால் பேய்வான் காய்ந்தால் காய்வான்.
  25. மாமியார் ஒடச்சா மண் பானை மாட்டுப்பொண் ஒடச்சா பொன் பானை. 
  26. உனக்கும் பெப்பேப்பே    உங்க அப்பனுக்கும் பெப்பேப்பே.
  27. கம்பளி வேண்டாம் கட்டு விட்டால்ப் போதும் .
  28. எரியற வீட்டில் பிடுங்கினது லாபம் .
  29. காராம் பசு கரக்கறது உழக்கு ஒதக்கற ஒதையிலே பல்லு பேந்து  போகும்!
  30. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்ப்ரிடாரியை  விரட்டியதாம்.

Saturday, June 11, 2016

பழமொழித் திரட்டு - I (30)

With an intention to preserve our proverbs etc.. this blog has been created.  To begin with :

  1. எண் சான் உடலுக்கு சிரசே பிரதானம். 
  2. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.
  3. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.
  4. காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாது .
  5. வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழியை ஒடச்ச மாதுரி .
  6. ஆச்சானுக்குப்  பீச்சான் மதனிக்கு  உடன் பிறந்தோன்.
  7. உடன் பிறந்தோன் கிட்டேயே பிறந்த அகத்து பெருமையா ? 
  8. பாவியைக் கடவுள் பனை போலே உயர்த்துவான் .
  9. மந்திரவாதி யார் அனாலும் கோழிக்கு ஒரு விமோசனம் இல்லை.
  10. அந்திக்கு ஆகாத பெண்ணும் இல்லை சந்திக்கு ஆகாத தண்ணியும் இல்லை.
  11. தாயைப் பழிச்சாலும் தண்ணீரைப் பழிக்காதே.
  12. கழுதை கெட்டா குட்டி சுவரு.
  13. வண்ணன் கூடப் போனா விடிய விடிய வெள்ளாவி.
  14. வண்ணானுக்கு வண்ணாத்தி மேல ஆசை வண்ணாதிக்குக் கழுத மேல ஆசை.
  15. அகத்தழகு முகத்திலே தெரியும்.
  16. வேலியிலே போகற ஓணானைப் பிடித்து வேஷ்டிகுள்ளே விட்டிட்டு கொடயுது கொடயுதுன்னு  சொன்னனாமா .
  17. எங்கேயோ போகற மாரியாத்தா எம்மேலே வந்து  ஏறாத்தா..
  18. பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்.
  19. தொட்டில்ப் பழக்கம் சுடுகாடு வரைக்கும்.
  20. செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி.
  21. புடிச்சாலும் புளியங் கொம்பாய் பிடிச்சிட்டான்.
  22. உடும்புப் பிடி பிடிச்சிட்டான்.
  23. கையிலே வெண்ணெயை வெச்சிட்டு நெய்யிக்கு அலயுவானேன்?
  24. துட்டுக்குப் பத்து குட்டி ஆனாலும் துலக்காக்குட்டி ஆகாது.
  25. பருவத்தில் பண்ணியும் பத்து பணம் பெரும்.
  26. ஊரன் வெட்டு நெய்யே ! எம் பொண்டாட்டி கையே!
  27. கொழுத்தவனுக்கு கொள்ளு. இளைத்தவனுக்கு எள்ளு.
  28. எள்ளு தின்னவன் உழைக்கணும்.
  29. ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே.
  30. கோபம் உள்ள இடத்திலே தான் குணமும் இருக்கும்.