Monday, March 27, 2017

தமிழ் வளர்த்த மஹான் - அருணகிரிநாதர்

திருப்புகழ் 1307 அகரமுமாகி



அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

இந்த பாடலிலே அருணகிரிநாதர் இரண்டு தலங்களை போற்றுகின்றார். பழமுதிர் சோலை மற்றும் கதிர்காமம். ஆழமான வேதாந்த கருத்துக்கள் நிறம்பிய பாடல்.

அகரம் என்னும் பரப்பிரமமமாகி, அதிபன் என்னும் ஈஸ்வரனாகி, கூடுதலாக, உள்ள மாயை என்னும் பிறகுருதி என்னும் இயற்கை ஆகி , இந்த ஆன்ம வாக ஆகியவனே!
பிரமன், விட்ணு, சிவன் என்று முத்தொழில் புரியும் தெய்வங்கள் ஆகி, அவர்க்கும் மேலான சர்வேஸ்வரனாக ஆகி! இந்த உலகங்கள் எல்லாம் ஆகி, பஞ்ச பூதங்கள் ஆகி, இனிமையான தமிழாகி வருபவனே!
இந்த பூமியில் என்னை போன்ற எளியவனும் வாழ, மயில் மீது ஏறி ஓடி வர வேண்டும்!
வேள்விகளில்  வழிபடக்கூடியவனாகிய இந்திரனுக்கு இன்பம் பயக்கும் முருகா! நீ தான் கதிர்காமத்தில் வேடன் தரும் பூசையை ஏற்கின்றாய்!
பலவாறாக, ஜதி இட்டு கொண்டு நடனம் ஆடும் மயில் மீது வரும் முருகக் கடவுளே! நீ தான் பழமுதிர்சோலையில் உறையும் தெய்வம்!

அப்பா என்ன ஞானம் என்ன  பக்தி? இவருக்கு ஈடு யாரேனும் வர முடியுமா? முருகனே முதல் வரி எடுத்துக் கொடுத்து பாடல் பாடிய பெருமை கொண்டவர்! நம் அருணகிரிநாதருக்கு ஈடு இணை எவருமே இல்லை. தமிழ் கடவுளான முருகனை, அந்த முருகனே அடி எடுத்து கொடுக்க, தெள்ளு தமிழிலே பாடி அனுபவித்த மஹான். என்ன பெருமை பாருங்களேன்...

Saturday, March 25, 2017

இராம நாமத்தின் மகிமைகள்

உபநிடதங்களில் முதன்மையானது மாண்டூக்ய உபநிடதம் - இது அதர்வண வேதத்தில் உள்ளது. தன்னுடைய ஆன்மாவை உணர வேண்டும் என்றால் இந்த ஒரு உபநிடதம் போதும் என்கிறார் இராமர். அப்படி என்ன தான் இருக்கின்றது என்றால்? "ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரம்ம " என்ற வாக்கியம் அந்த உபநிடதத்தில் உள்ளது. ஓம்காரத்தை மூன்றாகப் பிரித்து, ஆ, ஊ, ம்  என்று பிரித்து , அதனை - ஒரு ஜீவனின் மூன்று அவஸ்தைகள் ஜாகிரத் (விழித்து இருத்தல்), ஸ்வப்ன (கனவு) , சுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம் ) என்ற நிலைகளோடு ஒப்பிட்டு, அந்த மூன்று நிலைகளுக்கும், அப்பாற்பட்டது தான் ஆன்ம போதம் என்று சொல்கின்றது. அதாவது ஓம் என்ற எழுத்தில் மூன்று பாகங்கள், அம்மூன்றயும் தாண்டின நான்காம் பதமே(ஓசை இல்லாதது) ப்ரஹ்மம் என்றும் அதுவே இந்த ஆன்மாவின் மூன்று நிலைகளுக்கும்  சாக்ஷி என்றும் சொல்லும் மிக உன்னதமான உபநிடதம் மாண்டுக்யம்.

उपनिषदों  मे बाहुतः प्रमाणिक है माण्डुक्य उपनिषद | उसमे  बोला गाय है कि ॐ इत्येकाक्षरं ब्रह्म ! उसका मतलब्    है, ओंकार  हि ब्रम्म क  स्वरूप है ! इस जीव के अवस्थावों को तीन  भाग कर के, - जाग्रद् स्वप्न सुषुप्ति अवस्थों कि      साक्षिभूतः है उस आत्मबोध - ऐसे बोला गाय है उस उपनिषद मे.

उस प्रकार सब् कुछ मन्त्रों ओंकार से हि पैदा हुये! ॐ नम शिवाय - इत्यादि मन्त्रों सुब् ओंकार से हि शुरु होत है. लेकिन राम तारक  मन्त्र सिर्फ़् राम है - उस मे ओंकार ओर्   कुच नहि है - उस मन्त्र जीव ओर्  ब्रम्म के समाधि स्थति के रूप है | इतने गुण है राम मन्त्रे मे | उसको अनवरद जाप् कर्णे से इस आत्मस्वरूप को अपने अन्दर देक सकते हैं |

இந்த ஓம்காரத்தில் இருந்தே எல்லா மந்திரங்களும் பிறந்தன என்பது நம் நம்பிக்கை. அப்படி இருக்க, இராம தாரக மந்திரம் மட்டும் ஓம்காரத்தின் மாற்றுருவமாக உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், எந்த உபதேசமும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ராமா என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்.வாக்மிகி இதனை சொல்லி என்ன மேன்மைகள் அடைந்தார் என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்.

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.
இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.
இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.
அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது....என்று

Tuesday, March 21, 2017

வால்மீகி ராமாயணம் - பால காண்டம்

वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे पंचमः सर्गः

Tamil:
அயோத்தி நகரத்தை வால்மீகி மிகவும் வர்ணிக்கின்றார்.
இந்த பாரத நாட்டிலே , அயோத்யாபுரியின் பெருமையை பாருங்கள் - இனி இராமர் கோயில் அமைத்து இந்தப் பெருமைகளை மீண்டும் நிலைநாட்டப் போகின்றோம்.

Hindi:
हमारे भारत देश के एक मुख्य नगरी है  अयोध्यापुरी. उसके बारे मे वाल्मीकि जी , क्या बोलते है  कर के देखेंगे इधर.रामायण के बालकांड के पचम सर्ग मे पूरे के पूरे अयोध्यपुरी की तारीफ करते है श्री वाल्मीकि जी. श्री रामचंद्रा जी के कृपा कटाक्ष के ध्वारे, हमारे देश मे सुक और शांत हाएंशा वास करना चाहिए.



प्रासादै रत्न विकृतैः पर्वतैः इव शोभिताम् |
कूटागारैः च संपूर्णाम् इन्द्रस्य इव अमरावतीम् |१-५-१५

அயோத்தி நகரத்திலே விண்ணளாவும் மாட மாளிகைகள், அவற்றில் நவரத்னகள் பொருந்திய அலங்காரங்கள் இருந்தன. இந்திரனுடைய அமராவதியைப் போன்று சிறப்பாக விளங்கியதால் அயோத்திரபுரி.
அந்த நகரத்தையே ஒரு பெண்ணாகப் பாவித்து இங்கு வாலமீகி பாடுகின்றார்.

गृह गाढाम् अविच्छिद्राम् सम भूमौ निवेशिताम् |
शालि तण्डुल संपूर्णाम् इक्षु काण्ड रसः उदकाम् ||१-५-१७

இத்தகைய பெருமை வாய்ந்த அயோத்தி நகரம், வெட்டுக்கள் மற்றும் மாட மாளிகைகளால் நிறைய பெற்று, காலியான இடங்கள் இல்லாமல் காணப் பட்டது. தானியங்கள், நெல், அரிசி போன்ற செல்வங்கள் நிறைந்து இருந்த அந்த நகரத்திலே, தண்ணீர் கரும்புச் சாற்றைப் போன்று இனிது கொட்டிக் கொண்டு இருந்தது. என்ன அருமை பாருங்களேன்!

दुन्दुभीभिः मृदन्गैः च वीणाभिः पणवैः तथा |
नादिताम् भृशम् अत्यर्थम् पृथिव्याम् ताम् अनुत्तमाम् ||१-५-१८

துந்துபி, மிருதங்கம், வீணை,  சின்னம்கள் (கை தாளம்) போன்றவைகள் முழங்கி கொண்டு இருந்த அந்த அயோத்தியா நகரமானது எல்லா நகரங்களிலும் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

विमानम् इव सिद्धानाम् तपस अधिगतम् दिवि |
सु निवेशित वेश्मान्ताम् नरोत्तम समावृताम् ||१-५-१९

19  சித்த புருஷர்கள், தங்களுடைய தவத்தினால் அடையும் ஓவர் விண்ணகரமாக விளங்கிய அயோத்தியாபுரி, இந்த உலகத்திலே உள்ள சிறந்த மனிதர்களால் நிரம்பி இருந்தது.

ये च बाणैः न विध्यन्ति विविक्तम् अपरा परम् |
शब्द वेध्यम् च विततम् लघु हस्ता विशारदाः || १-५-२०

அயோத்யாபுரியில் இருந்த வீரர்கள் தர்மசீலர்கள். அவர்கள் தனியாக செல்லும் மிருகத்தையோ, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாய் இருக்கும் மனிதக்கலையையோ/ மிருகங்களையோ, உயிரி பயத்தினால் ஓடும் மனிதன் / மிருகம்,  தன்னுடைய இலக்காகிய பிராணியின் ஓசையை வைத்து அடித்தல் போன்ற செயல்களை செய்யவே மாட்டார்கள் . எனவே அவர்கள்  வில் விதையில் கை தேர்ந்தவர்களாகவும், புத்தி கூர்மை உடையவர்களாகவும் இருந்தனர்.

सिंह व्याघ्र वराहाणाम् मत्तानाम् नदताम् वने |
हन्तारो निशितैः शस्त्रैः बलात् बाहु बलैर् अपि || १-५-२१

வணகளின் உள்ள ட்ஸுட மிருகங்களான புலி, சிங்கம், கட்டு பன்றி போன்றவற்றை அந்த வீரர்கள் அஸ்திரம் இல்லாமல், தங்களுடைய பூஜை பலத்தினால் வென்றனர்.

तादृशानाम् सहस्रैः ताम् अभि पूर्णाम् महारथैः |
पुरीम् आवसयमास राजा दशरथः तदा || १-५-२२

இப்படியாக பலஸாலிகளான வீரர்கள் ஆயிரக் கணக்கில் இருக்க, மிகவும் வேகமான தேர் (ரத்த) வீர்கள் நிறைந்த நகரமாகத் திகழ்ந்தாள் அயோத்யா எனும் பட்டினம். அந்த நகரத்திலே இராஜ டஷரத்தான் தன்னுடைய ஆட்சியை அமைத்தான்.

ताम् अग्निमद्भिः गुणवद्भिः आवृताम्
द्विजोत्तमैः वेद षडङ्ग पारगैः |
सहस्रदैः सत्य रतैः महात्मभिः
महर्षि कल्पैः ऋषिभिः च केवलैः || १-५-२३

இத்துணை பெருமை வாய்ந்த அயோத்யாபுரியில் இருந்த வேதியர்கள்  தங்களுடைய தருமம் தாவரம்மா மூன்று அக்னிகளையும், வேள்விகளையும் செய்யும் சாதிகுணவான்களாக இருந்தனர். அவர்கள் ஈகையில் சிறந்தவர்களாக - ஆயிர கணக்கில் தானம் கொடுக்கும் உதார குணம் பொருந்தியவர்களாக இருந்தனர்.வாய்மை தவறாதவர்களாகவும், மரிஷிகளை ஒத்த பெரியவர்களாகவும், வேதத்தையும் அதனுடைய ஆறு அங்கங்களையும் கற்று தேர்ந்தவர்களாகவும் விளங்கினார்கள். இவர்கள் கிருஹ்யஅக்னி  , தக்ஷிணாக்னி ,  ஆவஹனீயாக்னி என்று சொல்ல பட்ட மூன்றி வகையான அக்னிகளையும் வணங்கி வேள்விகள் செய்து நாட்டில் மலை பெய்து, நாடும் , மக்களும் செழிப்புற தேவர்களை நித்தமும் வேண்டினார்கள். இத்துணை பெருமை வாய்ந்த நகரத்தில் தசரதன் ஆட்சி செய்தான். என்ன பெருமை பாருங்கள்..

इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे पंचमः सर्गः

Sunday, March 12, 2017

திருக்குறளும் தரும சாஸ்திரங்களும் - ஒழுக்கமுடைமை

பிற்ப்பொழுக்கம் மறவாமை என்ற பகுதியில் வள்ளுவர் மிகவும் ஸ்பஷ்டமாக , வர்ணாஸ்ரம தரும்மத்தைப் பற்றிக் கூறுகின்றார்.  நம் வள்ளுவரும், மனுவும் சொல்லும் நியமங்களை  காண்போம்.

११.५४ ब्रह्महत्या  सुरापानं  स्तेयं  गुर्वम्गनागमः |
महान्ति  पातकान्याहुः  संसर्गश्चापितैः  सह  ||

11:54  மனு மிகத் தெளிவாக, மகா பாதகங்கள் எவை என்று கூறுகின்றார்.

  1. பிரமணனைக் கொல்லுதல் (ப்ரஹ்ம ஹத்யா)
  2. சுரா (சாராயம்) என்று சொல்லப்படும் கள்ளைக் குடித்தல்
  3. திருட்டு 
  4. தன்னுடைய குருவின் படுக்கையை (மனைவியை) அபகரித்தல் 
  5. மேற்கூறிய நன்கு விதமான பாதகம் செய்தவர்களுடன் சேர்தல்
இதனையே எல்லா வர்ணங்களுக்கு ஆன பிறப்பொழுக்கம் என்கிறார் மனு.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.

வள்ளுவரும் இதே பொருளில் மேற்கூறிய குறளில், ஒழுக்கத்தை, உயிரை விட மேன்மையாகக் காத்தல் வேண்டும் என்கிறார்.

११.५५ अनृतं  च  समुत्कर्षे  राजगामि  च  पैशुनं  |
गुरोश्चालीकनिर्बन्धः  समानि  ब्रह्महत्यया ||

 11.55 மனு இந்த ஸ்லோகத்தில் பிரம்மஹத்திக்குச் சமமான பாதகங்கள் எவை என்று கூறுகின்றார்:
  1. தம்மை உயர் குலத்தோர் என்று பொய்யாக்க கூறிக் கொள்ளுதல்
  2. அரசுக்கு பொய்யான சாக்ஷியைக் கொடுத்தல்   
  3. தன்னுடைய ஆசார்யன் மீது பொய்யான பழியைப் போடுதல்.
மேற்கூறிய மூன்று விஷயங்களுமே ஒரு பரப்பானைக் கொல்லும் மஹப்பாவத்திற்க்கு சமம் என்று தெளிவாக்க கூறுகின்றார் மனு.

११.५६  ब्रह्मोज्झता  वेदनिन्दा  कौटसाक्ष्यं  सुहृद्वधः  |
गर्हितानाद्ययोर्जग्धिः  सुरापानसमानि  षट्  ||

11.56 இனி, சுராபானம் என்று சொல்லக்கூடிய , கள்ளுண்ணுதலுக்கு சமமான, பாதகங்கள் எவை என்று கூறுகின்றார் மனு.
  1. தான் கற்ற வேதங்களை மறத்தல்
  2. வேதங்களை நிந்தை செய்தல் 
  3. பொய் சாக்ஷி கூறுதல் 
  4. தன்னுடைய நண்பனைக் கொல்லுதல்
  5. தவிர்க்கப்பட வேண்டிய உணவினை உண்ணுதல்
  6. பருகத் தகாத திரவங்களைப்  பருகுதல்
வள்ளுவர், மிகவும் மேலோட்டமாகக் கூறிய விடயத்தை, மனு மிகத் துல்லியமாகக் கூறுகின்றார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

வள்ளுவர் இங்கு ஒரு பார்ப்பான் தான் கற்ற வேதங்களை மறந்து விட்டாலும் கூட மீண்டும் கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பிறப்பொழுக்கம் என்று சொல்லப்பெறும் தன வர்ண தர்மத்தை மறந்து மற்ற பாதகங்களை செய்தால், அந்தப் பிராம்மண ஜென்மம்  வீணாகி விடும் என்கிறார். முதல்  வருணத்திற்குக் கூறிய படியினால் மற்ற மூன்று வருணங்களுக்கும் இது பொருந்தும் என்று கொள்ளல் வேண்டும்.

११.५७  निक्षेपस्यापहरणं  नराश्वरजतस्य  च  |
भूमिवज्रमणीनां  च  रुक्मस्तेयसमं  स्मृतं  ||

11.57 அடுத்தபடியாக தங்கம் திருடுவதற்கு சமமான பாவங்கள் எவை என்று மனு சொல்கின்றார்.
  1. வைரம் முதலாகிய நவ இரத்தினங்கள் 
  2. வெள்ளி
  3. நிலம்
  4. குதிரை
  5. பணம்
  6. (அடிமை) மனிதர்கள்
ஆகிய பொருட்களைத் திருடுவார்கள் எல்லோருமே தங்கத்தைத் திருடியவர்களுக்கு சமம் .

११.५८ रेतःसेकः  स्वयोनिषु  कुमारीष्वन्त्यजासु  च |
सख्युः  पुत्रस्य  च  स्त्रीषु  गुरुतल्पसमं  विदुः ||

11.58 இனி தன்னுடைய ஆச்சர்யனுடைய, படுக்கையை(மனைவியை)த் திருடிய பாவத்திற்கு சமம் எது என்று சொல்கின்றார் மனு.
  1. தன்னுடைய சகோதரிகள் 
  2. பணிப்பெண்கள்
  3. கீழ் குலப் பெண்டிர் 
  4. நண்பர் மனைவியர் 
  5. தன்னுடைய மாற்றுப்பெண் (மருமகள் அல்லது தன் மகனின் மனைவி)
மேற்கூறிய ஐந்து வகையான பெண்களுடன் கலவி (உடலுறவு) வைத்துக் கொள்ளுதல் , தன்னுடைய குருவின் படுக்கையைத்(குரு தல்பம்) திருடிய பாவத்திற்கு சமம்.

இப்படியாக. மஹாபாதகங்கள் என்று சொல்லப்பெறும் ஐந்து பாபங்களையும், அவற்றிற்கு சமமான பாபங்களையும் மனு கூறுகின்றார்.

இவை  உபபாதகங்கள் என்று சொல்லுகின்றார் மனு.(11.59 - 11.57 )
  1. பசு மாடுகளை வதைத்தல்
  2. அருகதை  அற்றவர்களுக்கு வேள்வி  நடத்துதல் 
  3. தாய், தந்தை மற்றும் தம் குருவினை நிராகரித்தால் 
  4. வேதாத்யாயனத்தை நிறுத்தி விடுதல் 
  5. அக்னி காரியம் என்னும் நித்திய வேள்விகளை நிறுத்துதல் 
  6. தன்னுடைய அண்ணுனுக்கு முன்னர் திருமணம் முடித்துக் கொள்ளுதல்
  7. தன் தம்பிக்கு (அன்னான் திருமணம் இல்லாமல் இருக்க) திருமணம் முடித்தல் 
  8. கன்னிப்பெண்களை தூஷணம் செய்தல் 
  9. அதிக வட்டிக்குக் கடன் கொடுத்தல்
  10. (பிரம்மச்சர்ய) விரதத்தை முறித்தல்
  11. பூஞ்ச்சோலைகள், குளம் ,குட்டைகள், மனைவி , மக்கள் ஆகிய்வற்றை விலைக்கு விற்றல் 
  12. சொந்தக்காரர்களை நிராகரித்தால்
  13. விற்ககூடாத (அபாயகரமான) பொருட்களை விற்றல்
  14. பணம் வாங்கி/கொடுத்து  கொண்டு வேதங்களை கற்றல் / கற்றுவித்தல் 
  15. இரும்பு உறுகாலைகளை நடத்துதல் 
  16. மற்ற உயிரினங்களுக்கு துன்பம் விளைவித்தல் 
  17. மாந்திரீகம் முதலான க்ஷுத்ர விஷயங்களை செய்தல் 
  18. காட்டில் உள்ள மரங்களை விறகிற்காக வெட்டுதல்
  19. தன் சுய நலத்திற்காக மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் 
  20. ஆடல் பாடல் போன்றவற்றால் ஜீவனம் நடத்துதல் 
  21. திருடுதல்
  22. உயிரினங்கள், தேவர்கள், முன்னோர்கள் ஆகிய மூவர்க்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிராகரித்தல்
  23. தானியங்கள், உலோகங்கள், மற்றும் கால்நடைகளைக்  களவாடுதல் 
  24. கள்ளுண்ணும் பெண்களுடன் கலவி செய்தல் 
  25. க்ஷத்திரத்தியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பெண்களைக் கொல்லுதல் 
  26. நாஸ்தீகம் பேசுதல்

११.६७ ब्राह्मणस्य  रुजः  कृत्वा घ्रातिरघ्रेयमद्ययोः |
जैह्म्यं  च  मैथुनं  पुंसि  जातिभ्रंशकरं  स्मृतं ||

11.67  இனி மனு பின் வரும் பாதகங்கள் ஒருவனை, குலம் தாழ்ந்தவனாக ஆக்கி விடும் என்கிறார். இதனை ஜாதி பிரம்ஷ கரணம் என்று அழைப்பர் வடமொழியில்:
  1. பார்ப்பனர்களை அடித்து துன்புறுத்துதல்
  2. உண்ணக்   கூடாத பொருட்களை உண்ணுதல் / முகர்தல்
  3. அருந்தக்கூடாதவற்றை (கள்ளு) அருந்துதல்
  4. மற்றவர்வர்களை ஏமாற்றுதல் 
  5. ஆண்களுடன் உறவு கொள்ளுதல்
இப்படி மேற்கூறிய எல்லாமே ஒருவனை, தன் வருணத்தை இழக்கச்செய்யும் தீவினைகள் என்கிறார் மனு.

வள்ளுவரும் இதே விஷயத்தை:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

அதாவது தத்தம் வர்ண தருமத்தைக் கை விட்டால், தம் குலத்தை / குடிமை / வருணத்தை இழக்க நேரிடும் என்கிறார். (இதனையே ஜாதி பிரம்ஷ கரணம்   என்கிறார் மனு).

११.६८ खराश्वोष्ट्रम् ऋइगैभानाम् अजाविकवधस्तथा  |
सम्करीकरणं  ज्ञेयं  मीनाहिमहिषस्य च  ||

11.68  இனி மனு ஷங்கரிகாரணம் எனப்படும் கலப்பு வருணத்தவர்களாக ஆகிவிடும், கர்மங்களை பற்றிக் கூறுகின்றார். கீழ் கூறிய மிருகங்களைக் கொன்றால் ஒருவன் கலப்பு வருணத்தவனாக ஆகி விடுவான் என்கிறார்.
  1. கழுதை
  2. குதிரை 
  3. ஒட்டகம் 
  4. மான் 
  5. யானை
  6. வெள்ளாடு
  7. செம்மறி ஆடு 
  8. மீன் 
  9. பாம்பு 
  10. எருமை
இப்படியாகத் தானே வள்ளுவரும், மனுவும் பாதக செயல்களைத் தவிர்த்தலே பிறப்பொழுக்கம் என்னும் வர்ண தருமம் என்று கூறுகின்றார்கள்.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து.

ஜாதி பிரம்சம் , மற்றும் சங்கரி கரணம் ஆகிவிடும் எனும் அச்சத்தால், மனவலிமை உள்ளார்கள் தங்கள் வர்ண தர்மத்தை எக்காலத்திலும் விட மட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

Wednesday, March 8, 2017

திருக்குறளும் தரும சாஸ்திரங்களும் - புலான்மறுதல்

द्रविड ग्रन्थ (तिरुक्कुरळ्) च धर्म शास्त्राणि - मांस निराकरणं 

திருவள்ளுவரும் மனுவும் ஒரே விதமான பார்வையை உடையவர்கள் - இந்த புலால் விஷயத்தில். மனு வாழ்வதற்கான சமுதாய நீதியை கூறுகின்ற படியினால், எல்லா விதமான மக்களுக்கும் வேண்டிய நியமங்களைக் கூறுகின்றார். அவர்கள் இருவரும் கூறும் நியமங்களை இங்கு பார்ப்போம்.

५.२७ प्रोक्षितं  भक्षयेन्  मांसं   ब्राह्मणानां  च  काम्यया  |
यथाविधि  नियुक्तस्तु  प्राणानामेव  चात्यये ||

இந்த ஸ்லோகத்தில் மனு, மாமிசம் அல்லது புலால் உணவு உண்பதற்கு உரிய நியமத்தைக் கூறுகின்றார். பிராம்மணர்களால் , மந்திரம் சொல்ல பெற்று தண்ணீர் தெளிக்கப் பெற்ற மாமிசத்தையே ஒருவர் உண்ண  வேண்டும் - அதாவது வேள்வியின் சமயத்தில்  மட்டும் மாம்சம் உட்கொள்ள வேண்டும். ஏனைய சமயங்களில், உயிருக்கு அபாயம் நேரும் தருணத்தில் (வேறு உணவே கிடைக்கவில்லை என்றால்)  மாமிசத்தை உட்கொள்ளலாம் என்கிறார்.

५.३१  यज्ञाय  जग्धिर् मांसस्य इत्येष दैवो  विधिः  स्मृतः |
अतो अन्यथा  प्रवृत्तिस्तु  राक्षसो  विधिरुच्यते  ||

யஞ யாகாதிகளின் சமயத்திலே, உலக நன்மைக்காக  பலியாக கொடுக்கப்பெறும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே ஒருவர் உட்கொள்ளுதல் வேண்டும் (கடுகு அளவு மட்டுமே). ஆனால் மற்ற நேரங்களில் மாமிசத்தை உண்ணுதல் என்பது இராக்ஷஸர்களுக்கே உரியது.

இதனைத்தான் திருவல்லுறவரும் இவ்வாறு கூறுகின்றார்:

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.

தன்னுடைய உடலை வளர்ப்பதற்காகவே வேற்று உயிர்களின் உடலை உண்பவர்களுக்கு அருள் என்பது இருக்காது என்று. (தன்னலமற்ற செயலாகிய வேள்விகளுக்கு மட்டுமே மாமிசம் உரியவை)

५.३३ नाद्यादविधिना  मानसं  विधिज्ञो अनापदि  द्विजः |
 जग्ध्वा  ह्यविधिना  मांसं  प्रेतस्तैरद्यते अवशः ||

5.33 இப்படி இந்த சாஸ்திரத்தை அறிந்த முதல் மூன்று வருணத்தவரும் வேள்விகளுக்கு அல்லாது வேறு எந்தக் காரணத்திற்காகவும் மாமிசத்தைப் புசித்தல் ஆகாது. அப்படி தங்களுடைய சுயநலத்திற்க்காக மாமிசத்தை ஒரு துவிஜன் (முதல் மூன்று வர்ணத்தவர்) உண்பார்களேயானால், அவர்களுடைய இறப்பிற்குப்  பிறகு , அந்த மிருகங்களால் பீடிக்கப் படுவான்.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.

வள்ளுவர் இங்கு அதே கருத்தைத்தான் சொல்லுகின்றார் - ஒரு உயிரை கொள்ளுதல் புண்ணியம் அல்ல; அதே போல கொன்ற உயிரின் உடலை உண்பது என்பது தருமத்திற்கு உகந்த காரியம் அல்ல. உறியைக் கோலாலம் இருப்பதே புண்ணியம் ஆகும்.

५.३८ यावन्ति  पशुरोमाणि  तावत्कृत्वो  ह  मरणं |
वृथापशुघ्नः  प्राप्नोति  प्रेत्य  जन्मनि  जन्मनि  ||

5-38 அப்படி ஒருவன் உலக நன்மை கருதி வேள்விகள்  நடக்கும் சமயத்தில் அல்லாது, தன்னுடைய உடலை வளர்ப்பதற்காக  வேற்று உயிரைக் கொல்வான் ஆகில்,  அந்த ஜென்மத்திற்குப் பின் வரக்கூடிய பல பிறவிகளில் - கொல்லப்பெற்ற மிருகத்தின் உடலில் எத்துணை உரோமங்கள் இருந்தனவோ   அத்துணை பிறவிகளில் அவன்  எதிர் பாராமல் கொல்லப்பற்று , துன்புறுத்தப்பெறுவான். (மழைக்காகவும் , தேவகாரியத்திற்க்காக்வும் மட்டுமே பலியிட வேண்டும் என்பது திண்ணமாகிறது)

५.३९ यज्ञार्थं  पशवः  सृष्टः  स्वयमेव  स्वयंभुवा |
यज्ञो  अस्य  भूत्यै  सर्वस्य  तस्माद्  यज्ञे  वधो अवधः ||

5- 39 வெளிகளுக்காகவே அந்த தான்தோன்றி (ஸ்வயம்பு) ஆகிய இறைவன் மிருகங்களை படைத்தான். எனவே வேள்விகளில் தேவர்களுக்காக  பலியிடுதல் கொலையாகாது.

५.४० ओषध्यः  पशवो  वृइक्षास् तिर्यञ्चः पक्षिणस्तथा |
यज्ञार्थं  निधनं प्राप्ताः प्राप्नुवन्त्युत्सृइतीः  पुनः ||

5-40  யஞத்தில் பலியிடப் படுகிற பறவைகள், மிருகங்கள், செடி கொடிகள் எல்லாமே அடுத்த பிறவிகளில் மேன்மை  அடைகின்றன - ஏனென்றால் உலகத்தின் க்ஷேமத்திற்காக, அவை தம்மைத் தாமே அர்ப்பணித்த படியினால்.

५.४५ यो अहिम्सकानि  भूतानि  हिमस्त्यात्मसुख  इच्छया |
स  जीवाम्श्च  मृतश्चैव  न  क्वचित्  सुखमेधते ||

5-45  தன்னுடைய சுயநலத்திற்காக, வேற்று உயிர்களை எவன் ஒருவன் துன்புத்துகின்றானோ  அவன் உயிருடன் இருக்கும் பொழுதும், இறந்த பிறகும் மனா நிம்மதியோ, சந்தோஷமோ பெறுவதே இல்லை.

५.४६ यो  बन्धनवधक्लेशान्  प्राणिनां  न  चिकीर्षति |
स  सर्वस्य  हितप्रेप्सुः  सुखमत्यन्तमश्नुते ||

5-46  இப்படி வேற்று உயிர்களைத் துன்புறுத்தாமல் இருப்பவன், எல்லையில்லாத இன்பத்தை அடைகிறான்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

வள்ளுவரும் இதனையே கூறுகின்றார். மற்ற உயிரிகளைக்  கொல்லாமல், மாமிசத்தையும் உண்ணாமல் இருப்பவர்களை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்கிறார். சாஸ்திரங்களின் படி கிருஹஸ்தர்கள்  மட்டுமே வேள்வி   செய்ய வேண்டும். சன்யாசிகள் யாகங்கள் செய்ய மாட்டார்கள் - எனவே தான் இதனை வள்ளுவர் துறவற நீதியாகக் கூறுகின்றார்.

५.५१ अनुमन्ता  विशसिता  निहन्त  क्रयविक्रयी |
संस्कर्ता  चोपहर्ता  च  खादकश्चेति  घातकाः ||

5-51  இப்படி மிருக வதை மற்றும் கொலை செய்யும் களவாடிகள் யார் யார் எல்லாம் என்று தெரிந்து கொள்வோமா?

  1. மிருகக்கொலையை நடத்த அனுமதிப்பவன்
  2. மிருகத்தைக் கொல்பவன்
  3. கொன்ற மிருகத்தின் சடலத்தை விற்பவன் மற்றும் வாங்குபவன்
  4. மாமிசத்தை சமைப்பவன்
  5. சமைத்த மாமிசத்தைப் பரிமாறுபவன்
  6. மாமிசத்தை உண்பவன்

தருமத்தின் பிடியில் இருந்து யாருமே தப்ப இயலாது. மேற்கூறிய அனைவருமே கொலையாளிகள் என்கிறார் மனு.

५.५३ वर्षे  वर्षे अश्वमेधेन  यो  यजेत  शतं  समाः  |
मांसानि  च  न  खादेद्  यस्तयोः  पुण्यफलं  समं ||

5-53  ஒரு நூறு வருட காலத்தில், ஒவ்வொரு வருடமும் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுகின்றான், மாமிசத்தை உண்ணாமல் இருப்பவன். என்ன பெருமை பாருங்களேன்! (இன்றய களங்களில் யஃனத்தில் அரிசி மாவால் செய்த ஆட்டுக்குட்டியை பாலி கொடுத்து விடுகின்றார்கள். எனவே யஃனத்திலும் கூட பலியிட வேண்டிய அவைசாயமே இல்லை).

நம் வள்ளுவரும் இதனயே:

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

மேற்கூறிய மனுவின் ஸ்லோகத்தின் தமிழாக்கமே இந்தத் திருக்குறள் என்றால் மிகையாகாது! மாமிசத்தை உண்ணாமல் இருப்பது என்பது எத்துணை புண்ணியம் என்று நீங்களே பாருங்களேன்! நெய், அன்னம் ஆகியவற்றை அக்கினியில் சொரிந்து ஆயிரும் வேள்விகள் செய்வதை விடாய் புண்ணியம் தரக்கூடியது ஒரு உயிரைக் கொள்ளாமல் இருப்பதும், அதன் மாமிசத்தை உனது இருந்தாலும் என்கிறார் நம் வள்ளுவர்.

திருமூலரும் இதனையே பின்வருமாறு கூறுகின்றார்:

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.

५.५६ न  मांसभक्षणे  दोषो  न  मद्ये  न  च  मैथुने |
प्रवृत्तिरेषा  भूतानां  निवृत्तिस्तु  महाफल || 

5-56  இந்த சமுதாயத்திற்கு வேண்டிய நீதிகளை வழங்கும் பொருட்டு இங்கு மனு சொல்கின்றார் - மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் (கலவி) - ஆகிய இந்த மூன்று செயல்களுமே சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை முறை. இவற்றைச் செய்வதினால் எந்தப் பாபமும் இல்லை - ஆனால் இவற்றைத் தவிர்ப்பதால் பெரிய அளவில் நற்பயன்கள் கிடைக்கும் என்கிறார் மனு.

இன்றய சமுதாயத்திற்கு ஏற்ற ஸ்லோகம் இதுவே என்று கொள்ள வேண்டும். ஆனால்  பல இடங்களிலும் மாமிசத்தை உண்பவனும், கள்ளைக் குடிப்பவனும் ஜாதி பிரஸ்தம் - குலம்  தாழ்ந்தவன் ஆகி விடுகின்றான் என்று மனுவே சொல்லுகின்றார்.

Monday, March 6, 2017

திருக்குறளும் தரும சாஸ்திரங்களும் - வர்ணாஸ்ரம தருமம்

द्रविड ग्रन्थ (तिरुक्कुरळ्) च धर्म शास्त्राणि - वर्णस्रम धर्माणि 

தமிழ் மொழியிலே பிராம்மணர்களை மட்டுமே  துவிஜர் அல்லது பார்ப்பனர்கள் என்று கூறுவார். ஆனால் மனு, தம்முடைய தர்ம சாஸ்திரத்தில் முதல் மூன்று வருணங்களையுமே துவிஜர்  என்று சொல்லுகின்றார்- அதாவது பிரம்மோபதேசம் பெற்று, தம்முடைய உண்மையான ஆத்ம ஸ்வரூபம் அல்லது ஆன்ம ஞானம் பெறுபவர்கள் என்று பொருள் படும்.


१.८८ अध्यापनमध्ययनं  यजनं  याजनं  तथा  |
दानं  प्रतिग्रहं  चैव  ब्राह्मणानामकल्पयत्  ||
  1. தானம் அளித்தல் (ஈதல்)
  2. தானம் வாங்கி கொள்ளல் (ஏற்றல்)
  3. வேதங்களைக்  கற்றல், (ஓதல்)
  4. வேதங்களைக்  கற்றுவித்தல் (ஓதுவித்தல்)
  5. வேள்விகளை நிகழ்த்துதல் (வேட்டல்)
  6. வேள்விகளை நிகழ்த்துவித்தல் (வேட்பித்தல்)
ஆகிய 6 தொழில்களை உடையவர்கள் அந்தணர்கள்.
இதனையே திருமூலரும் தெள்ளிய தமிழில் சொல்லியிருக்கின்றார்:

5.1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

१.८९ प्रजानां  रक्षणं  दानमिज्या अध्ययनमेव  च  |
विषयेष्वप्रसक्तिश्च  क्षत्रियस्य  समासतः  ||

அதே போல , க்ஷத்ரியர்கள் எனப்படும் அரசர்கள் - 
  1. நாட்டுப் மக்களைக் காத்தல்
  2. வேள்விகளை நடத்துதல்(அந்தணர்களைக் கொண்டு), 
  3. தானங்கள் கொடுத்தல், 
  4. வேதங்களைக் கற்றல் மற்றும் தம்முடைய (ஐவகை) 
  5. இந்திரியங்களை அடக்கிக்கொள்ளுதல் 
என்ற கடமைகளை செய்ய வேண்டும்.

 இதனைத்தான் நம் வள்ளுவரும்,

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

அதாவது அந்நிய மன்னர்களிடத்தில் இருந்து நாட்டைக் காத்தல், குடி மக்களைக் காத்தல் மற்றும் குற்றம் செய்தவர்களைத் தண்டித்தல் ஆகிய தோழிகளை செய்வது வேந்தர்க்கு அழகு என்கிறார் வள்ளுவர்.

மனு, ஒரு அரசன் இந்திரன், யமன், வருணன், சூரியன் சந்திரன், மற்றும் நிலம் ஆகிய அனைத்துமாய் தன்னுடைய பிரஜைகளைக் காக்க வேண்டும் என்கிறார். 

इन्द्रस्यार्कस्य  वायोश्च  यमस्य  वरुणस्य  च |
चन्द्रस्याग्नेः  पृथिव्याश्च  तेजोवृत्तं  नृपश्चरेत ||
  1. இந்திரன் மழைப் பொழிவிக்கும் கடவுள் - அவனைப் போல தன நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும்.
  2. சூரியன்   தண்ணீரை ஆவிக்குவான் - அதே போல, மக்களிடத்தில் நியாயமான வரிகளை பெற வேண்டும் 
  3. வாயு எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பான் -அதே  போல அரசன் உளவு  செய்து தன நாட்டு நடப்புகளைத் அறிந்து கொள்ள வேண்டும் 
  4. யமன் காலத்தை வைத்து எல்லோரையும் கண்டிப்பான் - அதே போல ஒரு வேந்தன், விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரிடத்திலும் தன்னுடைய இராயன்ன்மையை நடத்த வேண்டும்.
  5. வருணன் தன பச்சக் கயிற்றால் தீயோர்களைப் பிடித்து இழுப்பந் - அதே போல் ஒரு அரசனும் தீமை இழப்பவர்களை தண்டிக்க வேண்டும்.
  6. முழு நிலவு எப்படி எல்லோராலும் வரவேற்கப் படுகின்றதோ,  அதே போல் ஒரு அரசனும் தன்னுடைய பிரஜைகளால் வரவேற்கப் பட வேண்டும். 
  7. குற்றம் புரிந்தவர்களையும், சூழ்ச்சி செய்பவர்களையும் அவன் தீயைப் போல அளிக்கட்டும்
  8. பூமித்தாய் எப்படி எல்லோரையும் சமமாகப் பார்க்கின்றாளோ, அதே போல் ஒரு அரசன் தன்னுடைய பிரஜைகள் எல்லோரையும் சமமாகப் பார்க்கட்டும் 
இதனைத்தான் வள்ளுவர் - 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

அதாவது வேத பராயணத்திற்கும் , தர்ம சாஸ்திரத்திற்கும், (அவற்றை அடிப்படையாகக் கொண்டு) துவக்கமாக இருப்பது அரசுனுடைய செங்கோல் என்று மேற்கூறிய ஸ்லோகத்தை அழகாக்க கூறுகின்றார் நம் வள்ளுவர்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.

வள்ளுவர் இங்கு  கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசனுடைய நாட்டில், மாடுகள் பால் கரவாது, அதே போல பார்ப்பனர்கள் வேள்விகள் நடத்த மாட்டார்கள் - அதனால் மழை  இன்றி பஞ்சமும், பட்டினியும் சூழ்ந்து கொள்ளும் அவன் நாட்டில் என்று சொல்கின்றார்.

१.९० पशूनां  रक्षणं  दानमिज्या .अध्ययनमेव  च  |
वणिक्पथं  कुसीदं  च  वैश्यस्य  कृषिमेव  च ||

மூன்றாம் வர்ணமாகிய வைசியர்கள் -
  1. கால்நடைகளைக் காத்தல், 
  2. தானங்கள் அளித்தல்,  
  3. வேதங்களைக் கற்றல், 
  4. வேள்விகள் செய்தல், 
  5. வியாபாரம் செய்தல், 
  6. பணம் (கடன்) கொடுத்தல், 
  7. வேளாண்மை செய்தல் 
ஆகிய கடமைகளை செய்ய வேண்டும். இந்தக் கணக்கில் பார்த்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரிவுகள் (90 %) மக்கள் எல்லோருமே வைசியர்கள் எனக் கொள்ளல் வேண்டும்.

அதாவது வணிகர் அல்லது வைசியர்களில் மூன்று வகை:

  1. கோ அல்லது பஷு வைசியர் ( கால் நடை பராமரிப்பவர்கள்)
  2. பூ வைசியர் (வேளாண்மை செய்ப்பவர்கள்)
  3. தன வைசியர் (வணிகம், மற்றும் வாங்கி, கடன் கொடுக்கும் செட்டியார்கள்)

நம் நாட்டிலே உள்ள வேளாளர், கால் நடை பராமரிப்பாளர், மற்றும் எல்லா வகையான செட்டியார்கள் எல்லோருமே வைசியர்கள் என்று கொள்ள வேண்டும்.சிரேஷ்டி என்ற வாடா மொழிச் சொல்லே செட்டி அல்லது செட்டியார் என்ற பதம் நம் தமிழிலே வழங்கப் படுகின்றது.

१.९१ एकमेव  तु  शूद्रस्य  प्रभुः  कर्म  समादिशत्  |
एतेषामेव  वर्णानां  शुश्रूषामनसूयया ||

நான்காம் வருணத்தவர்களாகிய சூத்திரர்கள் மேற்கூறிய மூன்று வருணங்களுக்கும் சேவைகள் செய்தல் அல்லது வேலை பார்த்தால் ஆகும். கடும் உழைப்பாளர்கள் ஆகிய படியினால் வேறு விசேஷமான கடமைகள் ஒன்றும் இந்த நான்காம் வருணத்தவர்களுக்குச் சொல்ல படவில்லை.