Monday, July 30, 2018

அஹோபில ஜீயரின் பெருமைகள்.....






ரிக் வேதத்தில் கனபாடியாகவும் , ஸ்ரீ மடத்தின் பாடசாலையில் ஆசிரியராகவும் பணி செய்த நம் ஆச்சார்ய ஸார்வ பௌமன், இரு பொழுதும் முத்தீயையும் வணங்கிய பெருமை கொண்டவர். தம் ஆசாரியன் அழைத்தார் என்று, இல்லற சுகத்தை துறந்து துறவறம் மேற்கொண்ட புண்ணிய புருஷர் இவர். உடையவர், ராமானுஜரின் மறு உருவம் நம் ஆசாரியன். அழகிய சிங்கர் ஜீயர் திருவடிகளே சரணம் .
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
கல்விக்கெல்லாம் உயர்ந்ததான வேதத்தை பயின்று, அதன் பின் துறவறம் கொண்ட புண்ணியர்களின் பெருமையை, அந்த வேதமும், உபநிஷத்துக்களுமே காட்டி விடும் என்கிறார் திருவள்ளுவர். பரமஹம்ஸ உபநிஷத் முதலிய வற்றில் சொல்லும் படி, ஏக வஸ்திரம் தரித்து, தங்கம் முதலாகியவற்றை துறந்து , அரிமுகனுக்கே அடிமை செல்லையும் நம் ஜீயரின் பெருமையை , வள்ளுவரும் முக்கூட்டியே சொல்லி விட்டார் போலும்

Sunday, July 15, 2018

க³ணேஶதாபிந்யுபநிஷத்..



நம் வைதீக மதத்திற்கு ஆதாரம் உபநிஷத்துக்கள். விநாயகர் , முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு, சூரியன் என்று மறையே இந்த ஆறு தேவதைகளும் உபநிஷத்துக்களில் போற்றப்பட்டுள்ளன. எனவே நம் ஜெகதாச்சார்யாள் இந்த ஆறு மதங்களை ஸ்தாபித்தார்.

கணபதி - சிவ பூத கணங்களுக்கு அதிபதி. அவர்தான், சேனை தலைவர் - முருகனுக்கும் சேனானி என்ற பெயர் உண்டு. ஷக்தி தேவியின் அம்சமாக உள்ளபடியினால் விநாயகனை செந்நிறம் உள்ளவனாக உபநிஷத்து வர்ணிக்கின்றது.

அதர்வ வேதத்தில் உள்ள கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்து, மிக தெளிவாக , கணேஷா காயத்ரி, கணேஷா மந்திரம் , கணபதியின் ஸ்வரூபம் ஆகியவற்றை விளக்குகிறந்து. இந்த உபநிஷத்து கணபதி ஹோமத்தின் முடிவில் பாராயணம் செய்யப்படும்.

ஏகத³ந்தம் சதுர்ஹஸ்தம் பாஶமங்குஶதா⁴ரிணம் । ரத³ம் ச வரத³ம்
ஹஸ்தைர்பி³ப்⁴ராணம் மூஷகத்⁴வஜம் । ரக்தம் லம்போ³த³ரம் ஶூர்பகர்ணகம்
ரக்தவாஸஸம் । ரக்தக³ந்தா⁴நுலிப்தாங்க³ம் ரக்தபுஷ்பை: ஸுபூஜிதம் ।
ப⁴க்தாநுகம்பிநம் தே³வம் ஜக³த்காரணமச்யுதம் । ஆவிர்பூ⁴தம் ச
ஸ்ருʼஷ்ட்யாதௌ³ ப்ரக்ருʼதே: புருஷாத்பரம் । ஏவம் த்⁴யாயதி யோ நித்யம் ஸ
யோகீ³ யோகி³நாம் வர: ॥ 9॥

ஒற்றைக் கொம்பும், நான்கு கைகளும், பாசம், அங்குசம் , அபயம் வரதம் தரித்த கைகளும், மூஷிகம் என்னும் எலிக் கொடியும், சிவப்பு நிறமும், பேழை வயிறும், பெரிய காதுகளும், செந்நிற சந்தனத்தை பூசிய உடம்பும், பக்தர்களை காப்பவனும், படைப்புக்கு முன்பே தோன்றியவனும், ப்ரக்ருதி புருஷர்களுக்கு அப்பாலாகி உள்ளவனும், - இப்படி எவர் நம் பிள்ளையாரை தியானிப்பார்களோ அவர்கள் சிறந்த யோகிகளாக இருப்பர்கள்.

ஒளவை   பாட்டி அருளிய விநாயகர் அகவலும் இதே கருத்தில் தான் இருக்கும். விநாயகரை சதுர்த்தி ஹடோறும் வாங்க அணைத்து வினைகளும் நீங்கி சகல நன்மைகளும் அடைவர் என்பதில் எந்த ஐயமும் இல்ல.

விஷ்ணு சஹஸ்ரநாமம்.....

விஷ்ணு சஹஸ்ரநாமம் உபநிஷத்துக்கள் உட்பொருளை கொண்டது. சாயம் வேளைகளில் ஜபித்தால் மிகவும் ஸ்ரேஷ்டம்..


  • 5 பூதக்ருத் - அனைத்தையும் படைத்தவர். மூவுலகங்களையும் தம் சரீரமாக கொண்டவர் 
  • 6 பூதப்ருத் - படைக்க பெற்ற அனைத்தையும் தங்குவார் 
  • 8 பூதாத்மா - படைக்கப்பெற்ற அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவர்.
  • 9 பூதபாவன - படைக்க பெற்ற அனைத்தையும் போஷித்து வளர்ப்பவர் 
  • 11 பரமாத்மா - எல்லா உயிர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்தும், அனைத்திற்கும் மேலான பரமாத்மாவாக விளங்குபவர்.
  • 12 முத்தானம் பரமா கதி - முத்தர்களின் உன்னதமான கதியாக விளங்குபவர். அவரவர் அனுபூதிக்கேற்ப அவரவர் அடையும் முக்தி நிலையின் முடிவாக, பிரம்மானந்த ஸ்வரூபமாக விளங்கும் சச்சிதானதன்மையன்.
  • 13 அவ்யய - மாறுதல்களுக்கு உட்படாதவர் (உபநிஷத்துக்களில் உள்ள அக்ஷரம், அவ்யயம் போன்ற சொற்களின் சாரம்)
  • 14 புருஷ - வேதங்கள் போற்றும் புருடனாக , புருஷஸுக்தம்   முதலான நூல்களில் போற்றப்பெறும் புருஷனாக விளங்குபவர்.
  • 15 சாக்ஷி  - அனைத்திற்கும் சாட்சியாக விளங்குபவர். (கனவு,நினைவு, உறக்கம் என்ற நிலைகளுக்கு சாட்சியாக விளங்கும் துரீய ஸ்திதி - ப்ரம்மம்)
  • 16 க்ஷேத்ரக்ஞ - க்ஷேத்ரம் என்னும் சரீரத்தில் அறிபவன் (உறைபவன்). 
  • 17 அக்ஷர - கால தேச வர்த்தமானங்களால் மாறாத தன்மை கொண்டவன் 
  • 19 யோக விதாம்நேதா - யோகத்தை அறிபவர்களுக்கெல்லாம் தலைவனாக, யோகேஸ்வரனாக உள்ளவர். கண்ணனை விட பெரிய யோகமும்  இல்லை , சாஸ்திரமும் இல்லை. பகவத் கீதையில் கன்னம் சொல்லும் அனைத்து யோகம்களும் அவனை உணர்வதற்க்கே என்பதை வலியுறுத்தும் உன்னதமான நாமம்.
  • 20 பிரதான புருஷேஸ்வர  - ப்ரக்ருதி, புருஷன் ஆகிய இருவர்க்கும் ஈஸ்வரனாக  விளங்கும் வைபவத்தை கொண்டவர்.
  • 27 ஷிவா - மாண்டூக்ய உபநிஷத்தில் சொல்ல பெற்ற துரீய ஸ்திதியாகி,  முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டு பிரம்மமாக பிரகாசிப்பவர். 
  • 29 பூதாதி - படைக்க பெற்ற வஸ்துக்களுக்கெல்லாம் ஆதியாகி , சர்வாதிஷ்டான ஸ்வரூபியாகி விளங்குபவர்.
  • 40 புஷ்காராக்ஷ - தாமரை இதழ்களை ஒற்றை கண்களை உடையவர் . 
  • 50 விஸ்வகர்மா - ஒரு சிப்பந்தியை போல இந்த உலகத்தை படைத்த பெருமை கொண்ட ஈஸ்வரனாக இருப்பவர் 
  • 290 பூத பவ்ய பவன்நாத - கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்று அனைத்திற்கும் ஈஸ்வரனாக விளங்குபவன்.
  • நாரஸிம்ஹ வபு  - மனிதனும் , சிம்மமும் கலந்த உருவம் கொண்ட புண்ணியர்  -நரஹரியாகி பிரகாசிக்கும் கருணாமயன்.


Saturday, July 7, 2018

ஸ்ரார்த்த விதி - part 2



நம் ரிஷிகள் நமக்கு வகுத்துக் கொடுத்த ஸ்ரார்த்த விதியை பற்றி தெரிந்து கொள்வோமா?

சிரார்த்தத்தில் செய்ய வேண்டியவை 


  1. முந்தய தினமே ஸ்ரார்த்தம் நடக்குமிடத்தை பசும் சாணியில் மெழுகுதல் ஸ்ரேஷ்டம்.
  2. கையில் பவித்ரத்துடன் பிராம்மணர்கள் காலை அலம்புதல் கூடாது.
  3. ஸ்ரார்தத்திற்கு நெய்யால் தான் பாகம் செய்ய வேண்டும். (நல்லெண்ணெய் , தேங்காயெண்ணை அவரவர் வழக்கத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும்).
  4. போதாக்கள் சாப்பிட்ட இலையை ஸ்வஸ்தி வாசகம் ஆகிய பிறகு எடுத்தல் வேண்டும்.பிண்டப்ரதானம் ஆகிய பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
  5. ஏகாதசி போன்ற விரத நாட்களிலும் கூட பித்ரு சேஷத்தை சாப்பிடலாம். விரதம் பங்கம் ஆகாது.


சிரார்த்தத்தில் செய்ய கூடாதவை 


  1. சிரார்த்தத்தில் உபயோகிக்கும் திரவ்யங்களை கழுவி சுத்தம் செய்த பின்னரே   உபயோகிக்க வேண்டும்.(உப்பு,வெல்லம் இவற்றை ப்ரோக்ஷிக்க  வேண்டும்)
  2. நாம் சாப்பிட்டு மிகுந்த பழங்கள் போன்றவற்றை சிரார்த்தத்தில் உபயோகிக்க கூடாது.
  3. பஹிஷ்டை (மாத விலக்குற்ற பெண்) ஸ்ரார்தத்திற்கு சமைக்க கூடாது.
  4. பஹிஷ்டைக்கு காலமாகிய பெண்ணும் சமைக்க கூடாது.
  5. பஹிஷ்டையாகி அன்றே ஸ்நானம் செய்த பெண்ணும் சமைக்க கூடாது.
  6. ரக்த சம்மந்தம் இல்லாத வெளி மனிதர்கள் , பெண்கள் ஸ்ரார்தத்திற்கு சமைக்க  கூடாது.
  7. ஈர வஸ்திரத்துடன் ஸ்ரார்தத்திற்கு பாகம் செய்ய கூடாது. 
  8. கர்பிணி, நோயாளி, கச்சம் அணியாதவர், (சிகை உள்ள விதவை) ஆகியோர்கள் சிரார்த்தத்தில் பாகம் செய்ய கூடாது. 
  9. பேசிகொண்டே, பட்டு பாடிக்கொண்டே பாகம் செய்ய கூடாது.
  10. இரும்பு பாத்திரம், கரண்டிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  11. அப்படி (ஸ்டீல்) இரும்பு பாத்திரத்தில் சமைத்தாலும் விளம்புவதற்கு வெண்கலம், பித்தளை கரண்டி, பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
  12. மணியோசை, இரும்பு  ஆகியவை ஸ்ரார்த்த காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
  13. சோப்பு, எண்ணெய், பவுடர், கண்ணாடி, திலகம், சிகை அலங்காரம் ஆகியவற்றை ஸ்ரார்த்ததன்று தவிர்க்க வேண்டும். 
  14. பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுதுகொண்டும் , பாகம் செய்ய கூடாது. 
  15. விரிதலை கோலத்துடன் பாகம் செய்ய கூடாது.
  16. அன்னத்தை கடைசியில் தான் வடிக்க வேண்டும்.
  17. பிதுர்களுக்கு ஆவி பறக்கும் அன்னமே உசிதம்.
  18. காராமணி, சுரைக்காய், கத்திரிக்காய், பெருங்காயம், முருங்கைக்காய், துவரம்பருப்பு, மற்றும் சாஸ்திரத்தில் வர்ஜ்யம் செய்யப்பட்ட எந்த வஸ்துக்களையும் சிரார்த்தத்தில் உபயோகித்தால் கூடாது.
  19. பிராம்மணர்கள் சாப்பிட்ட இலைகளை நாய், மற்றவர்கள் தீண்டுதல் கூடாது. எனவே அவற்றை குழி தோண்டி  புதைத்தல் நலல்து.
  20. போக்தாக்கள் சாப்பிட்ட இலையை மாட்டிற்கு கொடுத்தால் பாபம். எச்சிலை மாட்டிற்கு கொடுக்க கூடாது என்பது சாஸ்திரம்.
  21. ஏகோதிஸ்தம், மாசிக, அனுமாசிகம், சபிண்டீகரணம் , கயா ஸ்ரார்த்தம் ஆகியவற்றில் அபிசிராவணம் கிடையாது.
  22. பிராம்மண போஜனம் முடியும் வரை ஹோமாக்னி(ஸ்ரார்த்த ஹோமம்,ஒளபாஸனம்) அணைய கூடாது.
  23. வாயச பிண்டத்தை காக்கை எடுக்கும் வரை அருகில் இருந்து ரக்ஷிக்க வேண்டும்.
  24. சதுர்த்தார் பார்த்தாலோ, நாய் முதலியவைகள் பிண்டத்தை புஜிதாலோ புநஸ்ரார்தம்  செய்ய  வேண்டும். (அன்று உபவாசமாக இருந்து மறுநாளே விதிப்படி ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்)
  25. பிண்டம் உடைந்தாலோ, போக்தாக்கள் வாந்தி எடுத்தாலோ ஸ்ரார்த்தம் நஷ்டமாகி  விடும் - புநஸ்ரார்தம் செய்ய  வேண்டும்.
  26. ஸ்ரார்த்தம் முடியும் வரை கோலம் போடுதல், புண்ட்ரம் அணிதல், ருத்ராக்ஷம் அணிதல் கூடாது.
  27. பிண்டப்ரதானம் ஆகிய பிறகு சிறிது அன்னத்தை மந்திரம் சொல்லி வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.


ஸ்ரார்த்த விதி - part 1

ஸ்ரார்தத்திற்கு முன்பு 


  1. ஸ்ரார்த்தம் செய்வதற்கு முன்தினம் கர்த்தா, மற்றும் அவர் குடும்பத்தார்கள் பஞ்சகவ்யத்தை பானம் செய்ய  வேண்டும்.
  2. ஸ்ரார்தத்திர்ற்கு முந்தய தினம், வெள்ளி,பித்தளை , வெண்கல பாத்திரங்களை தேய்த்து, பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில வைக்க வேண்டும். 
  3. ஸ்ரார்த்தம் நடக்கும் கிருஹத்தை , அந்த இடத்தை முழுவதுமாக பசும் சாணத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
  4. ஸ்ரார்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை பரான்னம் செய்ய கூடாது.
  5. ஸ்ரார்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஸ்த்ரீ சங்கம், பாய், மெத்தை கூடாது. (குறைந்தது ஒரு பக்ஷமெனும் வருத்தமாக இருக்க வேண்டும்)
  6. ஸ்ரார்தத்திற்கு ஒரு ஒரு வாரம் முன்பு வரைக்கும் எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது. 
  7. ஸ்ரார்தத்திற்கு ஒரு வாரம் முன்னாவது ஒளபாஸனத்தை துவக்க வேண்டும். 


சிரார்த்தத்தில் போக்கத்தக்களை வரிப்பதற்கு உள்ள நியமங்கள் 


  1. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களை கால் அலம்பும் இடத்தை பூஜித்து, சுத்தம் செய்ய வேண்டும். 
  2. விச்வேதேவருக்கு சதுரமாகவும், பித்ருக்களுக்கு வட்டமாகவும் நீரால் கோலம் போல இடுவார்கள். (உண்மையிலே அந்த வடிவங்களில் மண்ணில் குழி வெட்ட வேண்டும் என்பது சாஸ்திரம். அது முடியாததால் இந்த ஏற்படு).
  3. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களாக வரிக்கப்பட்ட ப்ராம்மணர்களின் கணுக்காலை மட்டும் தான் அலம்புதல் வேண்டும்.
  4. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களின் கால் அலம்பிய ஜாலம் ஒன்றாக சேர கூடாது.
  5. விச்வேதேவர் மற்றும் பித்ருக்கள் வேற்று லோகத்தில் இருந்து ஸ்ரார்தத்திற்கு எவருவதால் தான், அவர்கள் சாப்பிடும் இடம், கால் அலம்பும் இடம் ஆகியவற்றை மந்திரங்களால் சுத்தம் செய்ய வேண்டும். 
  6. மனைவி கர்ப்பமாக  உள்ளவன், பஹிஷ்டயின் கணவன் - இவர்கள் சிரார்த்தத்தில் போக்தாவாக வரிக்க கூடாது.
  7. வயதில் மூத்தவரை பித்ருக்களாகவும், இளையவரை விச்வேதேவராக வரித்தல் வேண்டும்.
  8. ஸ்ராத்தத்தில் வரிக்கப்பட்ட ப்ராம்மணர்களை தங்கள் பித்ருக்களின் ஸ்வரூபமாகவே காணுதல் வேண்டும். 
  9. ஸ்ரார்த்த மந்திரங்களை பொரும்மையாக வேதோக்தமாக ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும்.
  10. ஒரே சிரார்த்தத்தில் அண்ணன் தம்பி இருவரையும் வரித்தல் கூடாது.
  11. வேதம் அறியாதவர்கள், நோயாளிகள், அனுஷ்டான ஹீனர்களை வரிக்க கூடாது.
  12. மனைவி மக்கள் இல்லாதவரை போக்தாவாக வரிக்க கூடாது.
  13. பத்னி இல்லாவிடினும் புத்ரன் உள்ளவனாய் போக்தாவாக வரித்தல் வேண்டும். 
  14. ஒரு சிரார்த்தத்தில் சாப்பிட்டுவிட்டு மூன்று நாட்களுக்கும் இன்னொரு சிரார்த்தத்தில் போக்தாவாக சாப்பிட கூடாது.