Friday, January 31, 2020

உற்ற துயர் துடைத்திடவே....

உற்ற துயர் துடைத்திடவே அடைந்தனர் அமரர்கள் பிரும்மாவை
பெற்றபிள்ளைகள் படுதுயரம் போக்க உபதேசம் செய்தானே!

கற்ற வேதம் அனைத்தின் சாரமாகி  முப்பத்திரண்டு எழுத்துக்கள்
நற்றவத்தின் பயனாகி உபதேசம் செய்தானே!

பற்றறுத்து அவன்பால் பத்திசெய்து ஓதுவீர் நரசிம்ம தாபினி என்னும் நூலே!
மற்றவற்றால் என்ன பயன் உணர்வீரே பாருளீரே!

தரும சாத்திரம் - 1

சின்ன வெங்காயம் பூண்டு காளான் மலினத்தில் விளைபொருட்கள்
தின்ன கூடாது இருபிறப்பாளர்கள் என்றானே மனு  ஒருபொழுதும்!

நல்ல பசுவின் பாலும் மற்றும் எருமை பாலை தவிர மற்றவற்றின்
பாலனைத்தும் பருகாப்பாலே! அறிந்திடுவீர் நம் மறபை!

கன்றில்லா மாட்டின் பாலும் ஆடு ஒட்டகம் கழுதை பாலும்
ஈன்ற பசுவின் முதல் பத்துநாள் பாலும் பருகாப்பாலே!

ஒற்றைக் குளம் கொண்ட மாக்கள் பாலும் வேற்று தாயின் பாலும்
கறந்து பின்பு புளித்த பாலும் பருகாப்பாலே சொன்னான் மனு!

நாட்டுக்கோழி பன்றி பூண்டோடு காளானும் வெங்காயம்
அறிந்து உண்ணும் இருபிறப்பாளர் தம் குலம் இழப்பர்!

தெரிந்தும் தெரியாலும் மேற்கூறிய ஆறு உணவையும் புசித்தவர்
இருபிறப்பாளர் ஒரு முழு வருடத்திற்கு ஆச்சரிப்பர் சந்தாப்பணம் என்னும் நோன்பே!

பெற்ற தாயும்

பெற்ற தாயும் உற்ற துணையும் மற்றும் உறவுகள் அனைத்தும் நீயே!
என்னப்பனே நரசிங்கா! என்னகத்துள் நின்று என்னை ஆட்கொண்டாய் !
என்சொல்வேன் நின் மஹிமை!

என்னப்பனே நரசிங்கா

சிவனது லிங்கத்தில் என் சிங்கத்தை கண்டேனே!
சாளக்கிராமத்தில் அவன் திருமுகம் கண்டேனே!
நிற்பன நடப்பன ஊர்வன பறப்பன  அனைத்திலும்
என்னப்பன் நரசிங்கன் ஒளியாய் ஒளிர்கின்றான்!
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

என்னகத்துள் நின்று என்னை ஆட்கொண்டு
என்னகங்காரம் மமதை அழித்து என்னை
நின்னடியானாய் ஆக்கி என்வினைகள் அகற்றி
நின் அகண்ட ஜோதியை எந்தனுக்குக்கு காட்டி
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

தாணுவும் மாலும் அயனுமாய் உலகில் உள்ள அனைத்துமாய்
ஆன்மாவாய் பிருமமாய் உலகங்கள் மூன்றுமாய் ஈசுவரனாய் !
படைத்தும் அழித்தும் காத்தும் மறைத்தும் அருளியும்
பஞ்சப்பிரமங்களாய் நின்ற எனப்பனே நரசிங்கா!
நாயேனையும் ஆட்கொண்ட என்னப்பனே நரசிங்கா !

நின் பொற்கழல்கள் என் சென்னியில் வைத்தருளி
நாயேனையும் ஆட்கொண்டு நின்னாடியான் ஆக்கி
மறுமைக்கும் இம்மைக்கும் நன்மைகள் பல செய்தாய்!
நின்னை அல்லால் வேறு தெய்வம் உண்டோ இவ்வுலகில்?
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!