Wednesday, August 31, 2016

ஆரிய-திராவிட பொய் கதை - அறிவோமா?

வெள்ளையர்கள் செய்த சதி

வெள்ளையர்கள் பஞ்சு வியாபாரம் செய்ய வந்து, "ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின மாதுரி" , நம்முடைய உள்நாட்டவர்களை ஆதிக்கம்   செய்யத் துவங்கினர். மன்னர் ஆட்சியில் இருந்து அவர்களுடைய அரசாங்கம் ஆகி விட்டது.சமய நூல்களையும் வரலாற்றையும் ஆராய்ச்சி செய்கின்றோம் என்று பிதற்றிக் கொண்டு, வேதங்களையும், ஆகமங்களையும்  மொழி பெயர்ந்தது மட்டும் அல்லாது,  அவர்களுடைய சொந்தக் கதையை உள்ளே நுழைத்து விட்டார்கள். சருமத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வுகளை உண்டு பண்ணி, கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு அடிமைகள், என்னும் கருத்தைத் பின்பற்றி வந்த , அந்த  முட்டாள்களுக்கு  அதனைத் தவிர வேறு  ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை போலும். சமுதாயத்தில் உள்ள மக்கள் தத்தம் தொழில்களுக்கு  ஏற்ப 4 வர்ணங்களாகப் பிரித்து, அவரவர் தொழில்களை அவரவர்  செவ்வனே  செய்து வந்த திறனைக் கண்டு பொறுக்க முடியாமல் போனார்கள் அவர்கள் - வேதத்திலும் இந்த வெள்ளையர் ஆதிக்கமே பேசப் படுகின்றது என்று கட்டுக் கதை கட்டினார்கள்.

வேதங்களின் சிறப்பு 

இதில், ஒன்றாக இருந்த வேதங்களை, வேத வியாசர் கலியுகம் துவங்கும் முன்னே  (3-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்)  நான்காகப் பிரித்தார்.  அப்படி இருக்க, ரிக் வேதத்தில் உள்ள இந்திரனுக்கும் அரக்கனுக்கும்  நடந்த யுத்தம், வெள்ளை கறுப்பர்களுக்கு இடையே நடந்த யுத்தம் என்றும்,  பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றும் எல்லாம் அவர்களுடைய கட்டுக் கதைகளை கட்டி விட்டான் மாக்ஸ் முல்லர் என்ற அந்த வஞ்சகன். எழுதா மறை - என்று குரு சிஷ்ய பரமபரையாக, ஓதப் பெற்ற   நம் வேதங்களை குறை கூறி, கதை கட்டினான் அவன்.

ஆரிய - திராவிட கட்டுக் கதை 

ஐயா என்ற சொல்லே ஆர்யா என்று வடமொழியில் வழங்கப் படுகின்றது. அதே போல் வடமொழியிலே நம் தமிழகத்துக்கு பெயர் தான் - திராவிட தேசம் - அதையே நம் தமிழ் தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடும்" என்று பாடுகின்றோம். சேர, சோழ, பாண்டிய - தேசங்களே நம்முடைய தமிழகத்தில் இருந்தன. நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை,மருதம் என்ற பிரிவுகளே இங்கு ருந்தன. திராவிட  நாடு என்ற பெயர் எந்த இலக்கியங்களிலும் பெரிதாக பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் , நம்மை எல்லோரையும் முட்டாள் ஆக்கும் வகையிலே இந்தக் கதை அமைந்து உள்ளது.ஆங்கிலத்திலே சார் என்பதை போல், தமிழிலே ஐயா என்பதை போல், வட மொழியிலே மரியாதையைக் குறிக்கும் சொல்லே இந்த ஆர்யா என்பது. மற்றபடி எந்த விதமான பொருளும் அதற்கு இல்ல.

தமிழர்கள் / இந்தியர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒன்றே

நம் தமிழகத்தில் உள்ள எல்லோரும் ஒன்றே - அவர்களுடைய மரபணுக்கள் எல்லாம் ஒரே மாதரித்  தான் இருக்கும். அதனை நாம் அந்த வெள்ளைக்காரன் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை. எல்லாக் குலத்திலும் எல்லா விதமான மக்கள் உள்ளனர் இன்று - கருத்தவர்கள், வெளுத்தவர்கள் எல்லாம் எல்லாக் குலத்திலும் உள்ளனர். இதுவே இந்த  ஆரிய திராவிட  கதை பொய் தான் என்பதற்கு ஒரு பெரிய ஆதாரம்.சைவம் தழைத்து ஓங்கி இருந்த காலத்தில், ஜாதி பேதம் இன்றி(வேளாளர்கள், வணிகர்கள், அரசர்கள், பார்ப்பனர்கள்) எல்லோரும் சேர்ந்து சிவத்  தொண்டு செய்தனர்.  சைவத்துக்கு மிகவும் நெருங்கிய மொழியாகிய நம் தமிழ் மொழி, அகத்திய முனிவரால் வளர்க்கப் பெற்றது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை.  தொல்காப்பியம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் இலக்கணத்திற்கு வித்து இட்டவர்கள் அவர்கள் தான். ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழ் வளர்த்தனர் ஒரு காலத்தில்..

சங்க இலக்கியங்கள் 

சங்க காலப் புலவர்கள், திருவள்ளுவர்,இளங்கோ அடிகள் - இவர்களுக்கு எல்லாம் தெரியாத விஷயம் இந்த மாக்ஸ்  முல்லர் என்ற வஞ்சனுக்குத் தெரிந்து விட்டது போலும். தமிழ் வளர்த்த கபிலர், பரணர் - அவர்களை எல்லம் விட்டு விட்டு, சங்க  புலவர்களுக்கு எல்லாம் தெரியாத உண்மை அந்த வெள்ளையனுக்குத்  தெரிந்து விட்டது போலும்.நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும், தமிழ் இலக்கியங்களும்  -  இந்த வெள்ளைத்தோலும் கருப்பு மனமும் கொண்ட வஞ்சகர்களுக்கு அப்பாற்பட்டது.
இனி   நம் வேதங்களின் சிறப்பை வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறர் என்று பார்ப்போம்:

மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

அதாவது, தான் குருகுலத்தில் கற்ற வேதத்தை மறந்தாலும் கூட மீண்டும் படித்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு பிராம்மணன், தன்னுடைய பிறப்பொழுக்கம்   (சமஸ்கரம்) - அதனை மறந்தால் எப்பொழுதும் மீண்டும் பெற முடியாது என்கிறார் வள்ளுவர். இதனை ஒரு சாதி அல்லது குலத்தைப் பற்றிச் சொல்லும் குறளாக   எடுத்துக் கொள்ளாமல், சங்க காலத்திலே நம் தமிழகத்தில் வேதங்கள் தழைத்து ஓங்கி இருந்தன என்றும், அதனை செவி வழியாகப் படித்தார் என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி என்றால், வள்ளுவருக்குத் தெரியாத விஷயம், இந்த வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா? இல்லவே இல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதிகாரத்தில் வேதங்களின் சிறப்பைக் காணலாம் இங்கே:

சிலப்பதிகாரத்தில் வஞ்சினமாலை  என்ற சாபம் கொடுக்கும் படலம் 




யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து 45

மகா பதிவ்ருதை ஆகிய நம் கண்ணகித் தெய்வம், தன்னுடைய கணவனைத் தவறாக கொலை புரிந்த பாண்டிய மன்னன் மீதும் அவன் நகரத்தின் மீதும் தீராக்  கோபம் கொண்டாள்.கண்ணகி பாண்டியன் மீது தீராத கோபம்  கொண்டு, தன்னுடைய இடப்பாகத்து  முலையை, தானே தான் கையால் கிழித்து எடுத்து, மதுரை நகரத்தை மும்முறை வலம் வந்து பிறகு  மதுரை மீது தன்னுடைய  தனத்தை எரிந்து சாபம் கொடுக்கின்றாள்.

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் 
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50

சினம் கொண்ட கற்புக்கரசி கண்ணகியின் முன்னர், அக்னி பகவான் ஒரு ப்ராஹ்மண வேஷம் கொண்டு தோன்றினான். அந்த   கற்புத் தெய்வத்தின் ஆக்கினையைப் பெற்று அவன் மதுரையை அழிக்கலுற்றான். இங்கு எரியும் மேலாடை அணிந்த வானவன் என்றால் - சிவ பெருமானையும் பொருள் கொள்ளலாம் - நாயன்மார்கள் சிவனை பொன் கழல்  வண்ணன் என்று போற்றுகின்றனர். ஆனால் தர்மஸ்வரூபி ஆக இருக்கும் அக்னியையும் பொருள் கொள்ளலாம் - பஞ்ச  பூதங்களும் இறைவனின் படைப்பே என்பதால், அவர்கட்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமேஸ்வரனையே குறிக்கும் என்று பொருள் கொள்ளலாம்.

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55

கண்ணகி  தீக்கடவுளுக்கு  ஆணை இட்டாள்.
  1. பார்ப்பனர் (ப்ராஹ்மணர்)
  2. தருமம் தவறாமல் இருக்கும் சான்றோர்கள்
  3. பசு மாடுகள்
  4. பத்தினிப் பெண்கள்
  5. வயது முதிர்ந்த மக்கள்
  6. சின்னக் குழந்தைகள் 
ஆகிய இவர்களை விட்டு மற்றவர்களை எரித்து விடுமாறு அக்னிக்கு ஆணை இட்டாள்   நம் கற்புக்கரசி கண்ணகி. சங்ககாலம் தொட்டதே இந்த மரபு இருந்து வந்தது நமக்குத் தெரிகின்றது. பத்தினிப் பெண்கள் தங்கள் கோபத்திலும் கூட, தர்மத்திற்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.அதாவது நாடு செழிக்க, அக்னி காரியம் செய்து, நட்டு நலனுக்காக வேள்விகள் நடத்தும் பொருட்டு பிராம்மணரும், தத்தம் வர்ணாஸ்ரம தர்மங்களை எல்லாம் தவறாமல் காப்பாற்றும் தர்மசீலர்களும், தம்முடைய பாலைப் பொழிவதால் பசுக்களையும், தம்மைத் தாமே கத்துக் கொள்ள முடியாத முதியவர் மற்றும் சிறு குழந்தைகள் ஒழிய எல்லோரயும் எரித்து விடுமாறு ஆணை இட்டாள் நம் பத்தினித்தெய்வம் கண்ணகி. தர்மம் சாஸ்திரங்கள் கூறும் விஷயத்தை அப்படியே சொல்லி இருக்கின்றாள் பாருங்கள்.

சிலப்பதிகாரத்தில் கட்டுரைக்கு காதையில்:

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 

மதுரை எரித்த கண்ணகிக்கு,  மதுரைத் தெய்வம் மீனாட்சி வரம் கொடுக்க, சேர நாடு நோக்கிச் செல்கின்றாள் - அப்பொழுது பராசரன் என்ற பிராம்மணன் , அவளுக்கு சேர நாட்டின் பெருமைகளை சொல்வது போன்று அமைந்த பாடல் இது.

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70

சாஸ்திரங்களில் சொல்லப் பெற்ற விஷயங்களை எல்லாம் இளங்கோ அடிகள் மிகவும் துல்லியமாகக் கூறுகின்றார் - இரு பிறப்பாளர்(துவிஜா), 5  வேள்விகள் (ரிஷி,தேவ,பித்ரு,புத்த,அதிதி), 3 தீ  மற்றும் ஆறு தொழில் (வேதம் கற்றல் மற்றும்  கற்றுவித்தல், வேள்விகள் செய்தல்செ மற்றும் செய்வித்தல் , தானம் கொடுத்தால் மற்றும் வாங்கி கொள்ளுதல்) ஆகிய அந்தணர்களை பேணிய மன்னன் - என்று தர்மம் சாஸ்திரங்கள் கூறும் பெருமைகளை எல்லாம் இங்கு சொல்கின்றார் நம் இளங்கோ அடிகள்.

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்

இப்படி எல்லாம் உள்ள அந்த பராசரன் என்ற பிராம்மணன் - சேர நட்டு அரசனின் பெருமைகளைப் படும் பொருட்டு சொல்லும் வசனம் இது. என்ன அருமை பாருங்கள்.

வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண

அதாவது வட தேசத்தில் இருந்த மன்னர்களை வென்று, இமயம் முதல் குமாரி வர ஒரே அரசாக ஆண்ட பெருமை கொண்ட பாண்டிய மன்னன் என்று கூறுகின்றார் நம் இளங்கோ அடிகள். இங்கு அவர் ஆரியர்   - என்பது ஒரு இனம் என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை(வட தேசத்து மக்களைக் குறிக்கும் சொல் தான் அது).

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி 
விண்ணக மாதர்க்கு விருந்து. 

கண்ணகி என்ற பத்தினியின் பெருமை எப்படிப்பட்டது என்று பாருங்கள். புராணத்தில் சொல்லப் பெற்ற சாவித்ரி, நளாயினி போன்று- அதையும் தண்டி தான் கணவனைக் கொன்ற மன்னனையும், அவன் தேசத்தையும்  எரித்து, முன்வினைப் பயனே என்று மதுரைத்தெய்வம்   மீனாட்சி இடத்தில,  சொல்லப்ற்று, தான் கணவனோடு ஒன்றாக ரத்தத்தில் சுவர்க்கம் சென்ற பெருமை கொண்டவள் நம் கண்ணகி. நம் இந்தியர்களுக்கும்  தமிழர்களுக்கும் கற்பு  என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

தமிழகம் மற்றும் நம் தேசத்தின் பெருமை 

யாராலும் அசைக்க முடியாத நம் கலாச்சாரத்தைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளை வஞ்சகர்கள் இந்த மாதிரியான போலிக்  கதைகளை எல்லாம் கட்டினர். இனிமேலேனும் நாம் அனைவரும் முழித்துக் கொள்ள வேண்டும்.இனிமேல் ஆவது நாம் எல்லோரும் ஒன்று என்ற மனோபாவத்துடன் நம் நட்டு முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாடு பட வேண்டும்.வெள்ளைக் கலாச்சாரத்திற்கு   கீழானது தான் நம்முடைய நாகரீகம்  என்று வெள்ளைக்காரர்கள் கட்டிய கதை  தான் இது எல்லாம்.

Sunday, August 28, 2016

பெரியாழ்வார் பாடும் கண்ணன் பெருமைகள் - II

சப்பாணிப் பருவம்

அளந்திட்ட   தூணை  அவன்  தட்ட  ஆங்கே
வளர்ந்திட்டு  வாழுகிற  சிங்க  உருவாய்
உளந்தொட்டு  இரணியன்  ஒண்மார்வகலாம்
பிளந்திட்ட  கைகளால்  சப்பாணி
பேய்முலைய  உண்டான சப்பாணி


உட்கார்ந்து கொண்டு, தலை ஆட்டிய கண்ணன், இப்பொழுது சப்பாணி கொட்டுகின்றான் - அதாவது கைகளைத் தட்டிக் கொண்டு விளையாடுகின்றான். அதனை ஆழ்வார் பரவசத்துடன் அனுபவிக்கின்றார். ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொல்ல, தூணை பிளந்து கொண்டு, (அரி) சிங்க உருவாகி வெளியே வந்து , அந்த அரக்கனை,மார்பைப்  பிளந்து குடலை உருவி மலையாகப் போட்டு கொண்டான் திருமால் - அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கைகளால் சப்பாணி கொட்டுமாறு கண்ணனைக் கேட்டு கொள்கிறார் இந்த ஆழ்வார். என்ன பெருமை பாருங்கள்? உலகை எல்லாம் காக்கும் அந்தப் பரம்பொருள் சின்னக் குழந்தை அகி ஆழ்வாருக்கு தரிசனம் நல்கினர், அதனை  புகழும் பொழுது திருமாலின் பெருமைகளை எல்லாம் நமக்கு கூறுகிறார் ஆழ்வார். சேர்த்து பூதனை தன்னுடைய முலை உண்டு, அவளை வதைத்த வைபவத்தையும் இங்கு சொல்கின்றார் ஆழ்வார்.

தளர்நடைப் பருவம்

ஒருகாலில்  சங்கு  ஒருகாலில்  சக்கரம்  உள்ளடி  பொறித்து  அமைந்த
இருகாலும்  கொண்டு  அங்கங்கு  எழுதினாற்போல்  இலச்சினைபடநடந்து
பெருகாநின்ற  இன்பவெள்ளத்தின்  மேல்  பின்னையும்  பெய்துபெய்து
கருகார்க்  கடல்  வண்ணன்  காமர்  தாதை  தளர்  நடை  நடவனோ


ஆழ்வார் கண்ணனுடைய பக்தியில் திளைத்து   இங்கு அதன் உச்சத்திற்கே சென்று விட்டார் போலும். கண்ணன், தன்னுடைய திருப்பாதங்கள், கயாவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு பாதங்களுக்கு ஒப்பிடுகிறார் ஆழ்வார். ஒரு காலில் சங்கும், மற்றொரு காலில் சக்கரமும் பதித்து அழகான இரு கால்களுடன் , கண்ணன் தளர் நடை நடக்கிறான்.அப்படி நடக்கின்ற பொழுது, அந்த சங்கு சக்கரங்களின் அச்சு, தரையில் படியும் படி அழகு பொங்க சின்னக் கண்ணன் நடக்கின்றான். அதனைக் கண்ட ஆழ்வார் மற்றும் ஆயர்கள் நெஞ்சத்திலே பேரின்ப வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அத்துனை பெருமைகள் வாய்ந்த, நம்முடைய சின்னக் கண்ணன் - மன்மதன் என்று சொல்லப் படும் காமனுக்குத் தந்தை, கரிய நிறம் கொண்ட மேகம் மற்றும் நீலக் கடல் வண்ணம் கொண்ட எம்பிரான் மெல்லத் தளர் நடை நடக்க மாட்டானோ? என்று தம்முடைய பக்தியையும், எம்பெருமானின் பெருமைகளையும் இங்கு நமக்கு எல்லாம் சொல்லுகின்றார் ஆழ்வார்.

அச்சோப் பருவம்

சின்னக் கண்ணன் வளர்ந்து மெல்ல நடக்கும் பருவம் எய்தி விட்டான். இப்பொழுது அவன் வந்து தம்மை அணைத்துக் கொள்ளும் பருவம் வந்ததனை, ஆழ்வார் கொண்டாடுகின்றார்.

மிக்க  பெரும்புகழ்  மாவலி  வேள்வியில்
தாக்கதிதன்றென்று  தானம்  விளக்கிய
சுக்கிரன்  கண்ணைத்  துரும்பால்  கிளறிய
சக்கரக்  கையனே  அச்சோவச்சோ
சங்கமிடத்தானே  அச்சோவச்சோ


இங்கு மஹாபலி சக்ரவர்த்தியின் வேள்வியில், பகவான் வாமனனாக மூன்றடி மண் கேட்ட வைபவத்தைக் கூறுகின்றார் ஆழ்வார். வந்திருப்பது எம்பெருமானே என்று தெரிந்து கொண்ட அசுரர் குருவாகிய சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க நீர் வார்க்கும் ஜல பாத்திரத்தில் (கிண்டி) ஒரு வண்டு உருவம் கொண்டு,  நீர் விழாதபடி அடைத்துக் கொண்டார். அதனை, அறிந்த எம்பருமான், ஒரு தர்பைப்புல்லால், குத்தி விட அவரது கண்களில் ஒன்றை இழக்க நேரிட்டது. அந்த சம்பவத்தைச் சொல்லி, வலது கையில்  சக்கரமும், இடது கையில் சங்கும்  கொண்டவனே, அச்சோ - என்று என்னை  வந்து அணைத்துக் கொள் என்கிறார்.

புறம் புகுதல் / முதுகைக் கட்டிக்க கொள்ளும் பருவம்

நாந்தகம்  ஏந்திய  நம்பிசரனென்று
தாழ்ந்த தனஞ்சயர்க்கு ஆகி   தரணியில்
வேந்தர்கள்  உட்கா  விசயன்  மணித்திண்தேர்
ஊர்ந்தவன்  என்னைப்  புறம்  புல்குவான்  
உம்பர்  கோன் என்னைப்  புறம்  புல்குவான்


பாடுதற்குத் தமிழும், அனுபவித்தற்கு குட்டி கண்ணனும், பக்தி நிறைந்திட்ட மனதும் அருள பெற்ற ஆழ்வார் கண்ணனைப் பலவாறாக அனுபவிக்கின்றார். இப்பொழுது சின்னக் கண்ணனனை வந்து தம்முடைய முதுகைக் கட்டிக்கொள்ளும்படி அழைக்கின்றார் ஆழ்வார். நந்தகம் என்னும் வாள்  ஏந்தும்  வீரன் ஆகிய கண்ணன், அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய கண்ணன், தனஞ்சயன் என்னும் அர்ஜுனன் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த விஜயன் என்னும் அர்ஜுனனுடைய தேரோட்டியாகப் பணி புரிந்தான். அப்படிப் பட்ட சௌலப்யம் (அடியாருக்கு சுலபமாக இருத்தல்) நிறைந்த எம்பெருமான் வந்து என் முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? தேவர்களுக்கு எல்லாம் தலைவன் வந்து என்னுடைய முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? என்று கூப்பிடுகின்றார் ஆழ்வார்!

மெச்சூது 

காயும்  நீர்ப்புக்கு  கடம்பேரி
காலியான  தீய  பணத்தில்  சிலம்பார்க்க  பாய்ந்தாடி
வேயின்  குழலூதி  வித்தகனாய்  நின்ற
ஆயன்வந்து  அப்பூச்சி  காட்டுகின்றான்
அம்மனே  அப்பூச்சி  காட்டுகின்றான்




இங்கு பகவன் காளிங்க நர்த்தனம் ஆடிய கட்சியை  மிகவும் அழகாக வர்ணிக்கின்றார் ஆழ்வார். அதாவது , யமுனை நதியிலே , நடுவிலே தன்னுடைய கொடிய பணங்கள் (படங்கள்) மற்றும் தலையைத் தூக்கி ஆடிக்  கொண்டும், நஞ்சைக் கக்கிக் கொண்டும் இருந்த அந்தக் காளிங்கன் மீது ஏறுவதற்காக , கடம்ப மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து  தாவினார் - காளிங்கன் தலை மேல். அப்படி ஏறி, அவனுடைய வாலைத் தன் கைகளிலே பிடித்துக் கொண்டு பகவான் நர்த்தனம் புரிந்தான் - என்ன அருமை பாருங்கள். 8 வயது பாலகன் , குழல் ஊதுவதில் மட்டும் அன்று , நாட்டியம் ஆடுவதிலும் கெட்டிக்காரன். அத்தனை பெருமைகள் வாய்ந்த எம்பெருமான், பூச்சி காட்டுகின்றான் என்று கண்ணனை மெச்சிக் கொள்கின்றார் ஆழ்வார் இங்கு.

Wednesday, August 24, 2016

பெரியாழ்வார் பாடும் கண்ணன் பெருமைகள்


மின்னார்  தடமதில்  சூழ்  வில்லிபுத்தூர்  என்று  ஒருகால் 
சொன்னார்  கழற்கமலம்  சூடினோம்  - முன்னாள்  
கிழியறுத்தான்  என்றுரைத்தோம்  கீழ்மையினிற்செரும் 
வழியறுத்தோம்  நெஞ்சமே   வந்து  
  
பாண்டியன்  கொண்டாடப்  பட்டர்  பிரான்  வந்தான்  என்று  
ஈண்டிய  சங்கம்  எடுத்தூத  - வேண்டிய  
வேதங்கள்  ஓதி  விரைந்து  கிழியறுத்தான்  
பாதங்கள்  யாமுடைய  பற்று  


பெரியாழ்வாருடைய பெருமைகளை பரை சற்றும் பாடல்கள் இவை. பாண்டிய மன்னன், பர தத்வம் எது என்று வைத்த வாதத்திலே வென்று , பொற்கிழி அறுத்தார். அப்பொழுது பாண்டியன் யானை மீது அவரை ஏற்றிக் கொண்டு ஊர்கோலமாக அழைத்து வந்தார். அப்பொழுது, எம்பெருமான் அவருக்கு கட்சி அளித்தார். அந்த வரலாற்றை கூறும் வகையில் பாண்டிய பட்டரால் இயற்ற  பட்ட பாடல்கள் இவை.

பெரியாழ்வார் என்றாலே யார் என்று நமக்கு தெரிந்து இருக்கும். ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் ஊரிலே, வசித்து  அங்குள்ள எம்பெருமானுக்கு திருமாலைக்  கைங்கர்யம் செய்து, பாண்டிய மன்னன் வைத்த வாதத்திலே வென்று , பொற்கிழி அறுத்து, அந்தப் பணத்தில் கோயில் கட்டிய பெருமை வாய்ந்தவர்.


இன்றைக்குத் தமிழ் நட்டுச் சின்னமாக விளங்கும் அந்த கோபுரம், இவர் தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தில் கட்டியது  தான். அது மட்டுமா? ஆண்டாள் என்னும் பெண்  குழந்தயைக் கண்டெடுத்து, வளர்த்தி அவளை, ஸ்ரீ ரங்க நாதருக்கே திருமணஞ் செய்து வைத்த பெருமை கொண்டவர். அந்த ஆண்டாள் பாடிய தமிழ்ப் பாடல்களே நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை ஆகும். உண்மையான  தமிழ் குடும்பம் அவர்கள் தான். என்ன பெருமை பாருங்கள்? தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்த தொண்டு அளவற்றது.

அது மட்டுமா? ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணத்தில் சொல்லப்பெற்ற கண்ணனின் லீலைகளை எல்லாம் தெள்ளு தமிழில் பிள்ளைத் தமிழகப் பாடினார் இந்த ஆழ்வார்.  கண்ணபிரானின் பிறந்தநாள் விழாவாகிய இந்த ஜென்மாஷ்டமி தினத்தில், பெரியாழ்வார் சொன்ன கண்ணன் பெருமைகளை பார்ப்போமா?

பணம் வாங்கிக்கொண்டு ஆபாசக் கவிதைகளை அவிழ்த்து விடும் போலி கவிஞர்களைப்போல அல்லாமல், உலகம் உய்ய, கண்ணன் பெருமையைப் படுகிறார் நம்முடைய பெரியாழ்வார்.


1. கண்ணன் திருவவதாரம் 

வண்ண  மாடங்கள்  சூழ்  திருக்கோட்டியூர் 
கண்ணன்  கேசவன்  நம்பி  பிறந்தினில் 
எண்ணெய்  சுண்ணம்  எதிரெதிர்  தூவிடக் 
கண்ணன்  முற்றம்  கலந்து  அலராயிர்றே 

விளக்கம்: திருவாய்ப்பாடியிலே குழந்தைக் கண்ணன் அவதரித்த வைபவத்தை, ஆயர் பெருமக்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அந்தக் காட்சியை   ஆழ்வார் மிக அழகாக்க கூறுகின்றார். வடநாட்டு ஸம்ப்ரதாயத்திலே, விழாக்  களங்களில் சுண்ணாப்பு (வெள்ளை) பொடி, மற்றும் எண்ணெய் இவற்றை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டு விளையாடினார்கள். அதனால் கண்ணன் வீட்டு முற்றம் எல்லாம்  அந்த சுண்ணாம்புப் பொடி மற்றும் எண்ணெய் கலவையால் அழுக்கு ஆகிற்று என்கிறார்  ஆழ்வார்.

ஓடுவார்  விழுவார்  உகந்தாளிப்பார் 
நாடுவார்  நம்பிரான்  எங்குதான்  என்பார் 
பாடுவார்களும்  பலபேரை  கொட்டானின்று 
ஆடுவார் களும்  ஆயிற்று  ஆய்ப்பாடியே  

விளக்கம்: கண்ணன் பிறந்தாயிற்று. திருவாய்ப்பாடியிலே உள்ள ஆயர்கள் எல்லாருக்கும் தலைவன் நந்தகோபன். அவனுக்கு ஆண்பிள்ளை பிறந்த வைபவத்தை, அவர்கள் எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். மகிழ்ச்சியில் அங்கும் இங்குமாக ஓடுவோர்கள் சில பேர்,ஓட்டத்தினால் தடுக்கிக் கீழே விழுவோர்கள் சில பேர், மிகவும் சந்தோஷமாக கட்டி அணைத்து வாழ்த்துக்கள் சொல்பவர்கள்  சிலர் பேர், "குழந்தை  எங்கே?" என்று கேட்பவர்கள் சில பேர், சிறு பரைகளை   கொட்டிக் கொண்டு ஆடுபவர்கள் சில பேர், பாட்டுப் பாடிக் கொண்டாடுபவர்கள் சில பேர், அப்படி மொத்தம் ஆயர்பாடி என்று சொல்லப்படும் கோகுலமே திருவிழாக்கோலம் பூண்டது. சின்னக் கண்ணன் பிறந்த காட்சியை , தம்முடைய அகக்கண்ணால்  கண்டு, நமக்கு எல்லோருக்கும் எதுத்துச் சொல்கிறார் பாருங்கள் இந்த அற்புதமான ஆழ்வார்.

பேணிச்சீருடை  பிள்ளை  பிறந்தினில் 
காணத்தான்  புகுவார்  புக்குப்  பொதுவார் 
ஆணொப்பார்  இவன்  எரில்லைகாண்  
திருவோணத்தான்  உலகாளும்  என்பார்களே 

விளக்கம்:ஆண்களில்   சமம் ஆனவர் யாருமே இல்லை என்றும், திருவோணத்தில் பிறந்த (அந்த வாமனன்) குழந்தைக்கு  வேறு யாருமே சமம் இல்லை என்று எல்லோரும் கண்ணனை கொண்டாடினர்.

உரியை  முற்றத்து  உருட்டி  நின்றாடுவார் 
நறுநெய்  பால்தயிர்  நன்றாகத்  தூவுவார்  
செரிமென்  கூந்தல்  அவிழ்த்து  திளைத்து  எங்கும் 
அறிவழிந்தனர்  ஆய்ப்பாடி  ஆயர் 

விளக்கம்:கண்ணன் பிறந்த வைபவத்தைக்   கொண்டாட, உரியடி நடத்துகின்றார் ஆயர்கள். அந்த உரிக்கம்பத்தின்   மீது பாலும், நெய்யும் எரிந்து விளையாடினார் ஆயர்கள். ஆனால், எல்லோரும் தம்முடைய கூந்தலை அவிழ்த்து விட்டார்கள் - நெய்யும், பாலும் ஆகிய தலை முடியை உலர்த்த - அப்படியாக ஆயர்பாடி ஆயர்கள் எல்லோரும் கண்ணன் கொண்டாட்டத்தில் மூழ்கி இந்த உலக சிந்தகனை இழந்தனர்.

கிடக்கில்  தொட்டில்  கிழிய  உதைத்திடும் 
எடுத்துக்  கொள்ளில் மருங்கை  இருத்திடும் 
ஒடுக்கிப்புலகில்  உதரத்தே  பாய்ந்திடும் 
மிடுக்கிலாமையால்   நான்  மெலிந்தேன்  நங்காய் 

விளக்கம்: கண்ணன்பால் கொண்ட தீராத அன்பினால், ஆழ்வார் யசோதயாகவே   ஆகிவிட்டார் இங்கே. பிள்ளை பெற்ற தயார் எப்படி சொல்லுவாளோ , அதேபோல் இங்கு அவர் சொல்லுகின்றார். கண்ணனை படுக்க வைத்தால்  , தொட்டில் துணி கிழியும் அளவிற்கு உதைப்பானாம்  , எடுத்துக் கொண்டால் இடுப்பு வலிக்கும் அளவுக்கு கீழே தாவப்  பார்ப்பான், ஆனால், இறுக்கிப் பிடித்துக் கொண்டாலோ, வயிற்றுக்குள்ளே  பாயும் அளவுக்கு அமிழ்துவன். கண்ணனுடைய துடுக்குத்தனத்தால்   , மிகவும் தளர்ந்து விட்டதாக யசோதை சொல்லுகின்றாள்.யசோதை தன்னுடைய தோழிகள் இடத்தில சொல்லுவது போன்று அமைந்த பாசுரம் இது.

என்ன அருமை பாருங்கள். 5 நிமிடங்களில் நம்மை  அயற்படிக்கே அழைத்துச் சென்று விட்டார் ஆழ்வார்.

கண்ணனின் பாதாதி   கேச வர்ணனை 

சீதக்கடலுள்  அமுத்தன்ன  தேவகி 
கோதைக்  குழலாள்  அசோதைக்குப்  போத்தந்த 
பேதைக்  குழவி  பிடித்து  சுவைத்துண்ணும்  
பாதக்  கமலங்கள்  காணீரே 
பவள  வாயீர்  வந்து  காணீரே

விளக்கம்:குழந்தைக் கண்ணன், தன்னுடைய கால் கட்டை விரலை பிடித்து சுவைத்து உண்ணுகிறான். ஆழ்வார் அதை பார்த்து விட்டார் எல்லோரையும் அழைத்து, தன்னுடைய குழந்தையின்   அழகைக் காணுமாறு கேட்டுக் கொள்கின்றார் ஆழ்வார். தேவகி வயிற்றில் பிறந்து , யசோடத்தை வீட்டில் வளரும் அந்தக் குழந்தை , தான் கள் விரலை உண்ணும் காட்சியை வந்து பார்க்குமாறு கோகுலத்துப் பெண்களை எல்லாம், அழைக்கின்றார் ஆழ்வார்.

திருத்தொட்டில் ஆடுதல்

மாணிக்கம்  கட்டி  வயிரம்  இடைக்காட்டு  
ஆணிப்பொன்னால்  செய்த  வண்ண  சிறு  தொட்டில் 
பேணி  உனக்கு  பிரமன்  விடுதந்தான்  
மாணிக்குறளனே  தாலேலோ 
வையம்  அளந்தானே  தாலேலோ 

விளக்கம்:பலவிதமான முத்தும், மணிகளும் கட்டிய பொன்னால் ஆன தொட்டில், ப்ரம்மதேவன்   கொண்டு வந்து கொடுத்தான், கண்ணனை . அந்த தொட்டிலில் இட்டு, தாலேலோ என்று யசோதாயும், மற்ற ஆயர் பெண்களும் தாலாட்டு படுகின்றார்கள். ஆழ்வார் கண்ணன் இடத்திலே கொண்ட பக்தியின் மிகுதியால், கண்ணன்  த்ரிவிக்ரம அவதாரத்தில், குள்ளமான (குறள்) உருவத்தில் பிறந்து உலகங்கள் இரண்டையும் அளந்த பெருமையை இங்கு மிக அழகாக்க காட்டுகின்றார்.

சந்திரனை  அழைத்தல்

என்  சிறுக்குட்டன்  எனக்கோர்  இன்னமுது  எம்பிரான் 
தன்  சிறுக்கைகளால்  காட்டிக்  காட்டி  அழைக்கின்றான் 
அஞ்சன   வண்ணனோடு  ஆடலாட  உறுதியேல் 
மஞ்சில்   மறையாதே  மாமதீ  மகிழ்ந்தோடிவா  

விளக்கம்: ஆழ்வார் இங்கு கண்ணனைத்   தம்முடைய சிறு குழந்தை, இன்னமுது, என்றும், அந்த குழந்தை தன்னுடைய சிறிய கைகளால் காட்டி காட்டி அழைக்கின்ற அந்த நிலவை,  பணியில்/ மேகத்தில்  மறையாமல் தம்முடைய குழந்தயுடன் விளையாட வருமாறு அழைப்பு விடுகின்றார்.

சுற்றும்  ஒளிவட்டம்  சூழ்ந்து  சோதி  பரந்தெங்கும் 
எத்தனை  செய்யினும்  என்மகன்  முகம்  நேரொவ்வாய் 
வித்தகன்  வேங்கடவாணன்  உன்னை  விளிக்கின்ற 
கைத்தலம்  நோவாமே  அம்புலீ  கடிதோடிவா 

விளக்கம்: யசோதை, தன்னுடைய சிசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பினால், கண்ணன் கூப்பிட கூப்பிட, மதிக்காமல் வானத்திலே செல்லும் அந்த நிலவை இகழ்கின்றாள். கண்ணனின் அழகான முகத்திற்கு ஒவ்வாது - அந்த பௌர்ணமி   சந்திரனின் முகம் என்கிறார் ஆழ்வார். தாய்மையின் உச்சத்தையே அடைந்து விட்டார் ஆழ்வார்.அது மட்டும் அல்ல - நிலவைக் கூப்பிட்டிக்கு, தான் குழந்தைக்கு கைகள் வழிப்பதற்குள் அங்கே சீக்கிரமாக வருமாறு  கூறுகிறார்.

பாலகன்  என்று  பரிபவம்  செய்யேல்  பண்டொரு  நாள் 
ஆலினிலை  வளர்ந்த  சிறுக்கனவன்  இவன் 
மேலெழப்  பாய்ந்து  பிடித்துக்கொள்ளும்  வெகுளுமேல் 
மாலை  மதியாதே  மாமதீ  மகிழ்ந்தோடிவா 

விளக்கம்: நிலா, தன்னுடைய குழந்தயை கண்டு கொள்வதில்லை என்று, எச்சரிக்கை  விடுகிறாள் யசோதை. சின்னக் குழந்தை, என்று ஏளனமாகப் பார்க்க வேண்டாம், ஊழிக் காலத்தில் ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமை வாய்ந்தவன் இந்த பாலகன். அவனை மதிக்காமல் சென்று விடாதே - அவனுக்கு கோபம் வரும் அகில் எழுந்து உன்னைப் பிடித்துக் கொள்வான். எனவே மகிழ்வாக வந்து என்னுடைய குழந்தையுடன் விளையாடு என்று சொல்கின்றார் ஆழ்வார்.

சிறியனென்று  என் இளஞ்சிங்கத்தை  இகழேல்  கண்டாய் 
சிறுமையின்  வார்த்தையை  மாவலியிடை  சென்றுகேள் 
சிறுமைப்  பிழைகொள்ளில்  நீயும்  உன்  தேவைக்குரியைகாண்
நிறைமதி  நெடுமால்  விரைந்து  உன்னைக்  கூவுகின்றான்.

விளக்கம்: தன்னுடைய குழந்தை சின்னக் குழந்தை   என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம் - அந்த இளம்சிங்கத்தின் பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டல் தெரியும்  - அவன் எப்படி இரண்டு   அடிகளில் பூமியையும், வானத்தையும் அளந்தான் என்று  என்று யசோதை சொல்வதாக, ஆழ்வார் சொல்லுகின்றார்.சிறுமையை எண்ணி பரிபவம் கொள்ளாதே - உனக்கும் அவனுடைய உதவி வேண்டி வரும் , எனவே விரைந்து ஓடி வந்து விளையாடு  என்கிறார் ஆழ்வார்.

செங்கீரை ஆடுதல்

வானவர்  தாம்  மகிழ  வன்சகடம்  உருள 
வஞ்சமுலைப்பேயின்  நஞ்சமது  உண்டவனே 
கானக  வல்விளவின்   காயுதிரக்  கருதிக் 
கன்றது  கொண்டெறியும்  கரு  நிற  என்கன்றே 
தேனுகனும்  முரணும்  திண்திறல்வெந்நரகன்  
என்பவர்  தாம்  மடியச் செருவதிரச்செல்லும் 
ஆனை எனக்கு  ஒருகால்  ஆடுக  செங்கீரை 
 ஆயர்கள் போரேறே ! ஆடுக  ஆடுகவே 

விளக்கம்: கிருஷ்ணா லீலைகளை எல்லாம் அப்படியே கூறுகின்றார் ஆழ்வார் இங்கு. குழந்தை வளர்ந்து ஒரு 5 மாதங்கள் கழித்து உட்கார்ந்து கொண்டு தலையை காட்டும் பருவம். கண்ணனின் பக்தியில், அன்பில் ஊறிய  ஆழ்வார் இங்கு:


  1. சகடாசுரன் - ஒரு சக்கரத்தின் வடிவில் வந்த அரக்கனைக் கண்ணன் வதம் பண்ணின லீலை.
  2. பூதனை - மார்பகங்களில் விஷம் வைத்து கண்ணனைக் கொல்ல வந்த அரக்கி - அவளைக் கண்ணன் சம்ஹாரம் பண்ணின லீலை.
  3. வத்ஸாசுரன்- கன்று குட்டி யின் உருவத்தில் வந்த அரக்கன்.
  4. கபித்தசுரன்- மேல் கூறிய அரக்கனையும் , இந்த  விளா  மரத்தின் வடிவில் இருந்த   அசுரனையும் ஒன்றாக சம்ஹராம் பண்ணினான் நம் கண்ணன்.
  5. முரன், நரகன் - நரகாசுரனையும், அவனுடைய சேனைத் தலைவன் முரனையும் கண்ணன் கொன்ற லீலை. 
  6. தேனுகாசுரன் - கழுதை உருவத்தில் இருந்த அரக்கனை, கண்ணன் சம்ஹராம் பண்ணின லீலை.
எல்லாவற்றையும் சொல்லி, என்னுடைய கரு நிறக் கன்றே, யானையே , உன்னுடைய தலையை ஆட்டி செங்கீரை ஆடு , என்று தன் சிசுவைக் கொஞ்சுகின்றார். என்ன அற்புதம் பாருங்கள்!