Showing posts with label DharmaSastra. Show all posts
Showing posts with label DharmaSastra. Show all posts

Saturday, February 8, 2020

மனு கூறும் வாழ்க்கை முறை..

உதிக்கும் கதிரவன் பிணத்தின் புகையும் உடைந்த
இருக்கையும் யாத்திரைக்கு ஆகா சகுனங்கள்

நகத்தால் புல்லை கிள்ள்ளாதே காலால் நிலத்தை கீராதே
நகத்தை பல்லால் கடிக்காதே இம்மூன்றும் அழிவிற்கு வித்தாகும்

காளைகள் பாற்பசுக்கள் முதுகின் மேல் சவாரி செய்யாதே
பூமாலை தலைமுடி மேல் அணியாதே கழுத்தை நெரித்தல் கூடாது

இரவில் மரத்தடிக்கு அருகாமையில் இருக்காதே, உறங்காதே
கிராமம் வீடுகளின் முன்வாசல் வழியாகவே நுழைதல் வேண்டும்

சூதாட்டம் ஆடாதே படுக்கையில் படுத்து உணவினை உண்ணாதே
கையில் இட்ட மற்றும்  இருக்கையில்  வாய்த்த உணவினை உண்ணாதே

எள்ளினால் செய்த பண்டம் இரவி அத்தமனத்திற்கு பின் உண்ணாதே
நக்கினமாய் உறங்காதே சுத்தமற்ற இடத்திற்கு செல்லாதே உண்ட பின்பே

கால்களை கழுவி ஈரம் காயும் முன்பே உணவினை உண்ணுதல் வேண்டும்
ஈரக் கால்களுடன் படுக்கைக்கு செல்லாதே !

ஈர கால்களுடன் ஈரம் காயுமுன்பே உணவினை உண்டு முடிப்பார்
இந்த தரணியில் வாழ்வர் பல்லாண்டு இதுவே நம் நாட்டின் மரபு !

கைகளால் நீந்தி ஆற்றினைக் கடக்காதே ! மல சலங்களை
கண்களால் உற்று நோக்காதே! குறுகிய இடத்தில நுழையாதே!

தலை முடி சாம்பல் எலும்புடன் பருத்திக்கொட்டை உடைந்த
மண் பாண்டம் உமி  இவற்றை மிதியாரே நீண்ட ஆயுள் வேண்டுவோர்கள்!

நயவஞ்சர்கள்  புலையர்  சண்டாளர்கள் மூர்க்கர் முட்டாள்கள்
கடை குலத்தோர் இழிகுலத்தோர் இவர்களுடன் வசிக்காதே!

கடை குலத்தோர் இழி மக்கட்கு அறிவுரைகள் வழங்கிடுதல் கூடாது
மனு உரைத்த அற நெறியை கடை குலத்தோர்க்கு கூறுதல் கூடாது

கடை குலத்தோர்க்கு  அற நெறியை எடுத்துரைத்தும் விரதங்கள்
பலவற்றை அவர்கட்கு சொல்லும் மாந்தர் அசமவிருத்தம் என்னும் நரகிற்க்குள் வீழ்ந்து ஒழிவரே!

தலை முழுகாமல் நீராடாதே அசுத்தமாய் இருக்கும் வேலையில் தலையை தொடாதே
இரண்டு கைகளையும் சேர்த்து தலையை சொரிந்திடல் கூடாது

கோபத்தால் தலை மயிரை பிடித்திழுக்க கூடாது
தலை முழுகி குளித்த பின்பு எண்ணெயால் கைகால்களை தொடாதே !







Friday, February 7, 2020

மனு தன் சந்ததிகள்....

மனு தன் சந்ததிகள் என்பதால் தான்
நம்மை மனுஷ்யர்கள் என்பார்கள் உலகினிலே

மானிடர்  என்றும் மானவர் என்றும் உலகின் பற்பல
மொழிகளில் சொல்வர் அனைத்திற்கும் மூலம் மனு என்னும் முப்பாட்டானே!

அறத்திற்கும் ஆதியாம் வேதங்கள்  வேதங்களே உலகனைத்திற்கும்
மூலம்! உலகனைத்திலும் அறத்திற்கு மூலம் வேதமே!

மனு உரைத்த சாத்திரங்கள் அனைத்திற்கும் வேதமே சாரம்
முக்காலம் உணர்ந்தவன் சர்வஞானம் படைத்தவன் மனுவே!

மனுவே இந்த மனித குலத்தின் முப்பாட்டன்! உலகம் தன்னை
படைத்த பிரமன் மனுவை படைத்தான் மாந்தர்களை பெற்றிடவே!

மனுக்கள் பலருந்து அவர்களுள்  சுவாயம்புவ மனுவே
சூரியன் இடத்தில தோன்றி நம் சாத்திரத்தை உரைத்தானே!

ஆதியான வேதங்களும் அதன் பின்பு வேதியர்கள் தம் மரபும்
மேன்மக்கள் புண்ணியர் தம் மரபும் தன் மகிழ்ச்சியும் சாத்திரத்தின்  மூலம்!

அறத்தின் சாத்திரங்களை மதித்து அதன் படி வாழும் மக்கள்
இகத்தில் சுகங்களும் பரத்தில் பேரானந்தமும் பெறுவார்கள் இது சத்தியம்!

சுருதி என்பர் வேதத்தை மிருதி என்பர் தரும சாத்திரத்தை
இவ்விரண்டும் தரும் இவ்வுலகில் மகிழ்ச்சியும் அவ்வுலகில் அருளும்.

சுருதியும் மிருதியும் இவ்விரண்டும் மானிடர் தம் வாழ்விற்கு மூலம்
இவ்விரண்டும் சொல்லும் வழி வாழ்வார்கள் மேன்மக்களே!

ஆதியாம் வேதம் என்னும் சுருதியும் தரும சாத்திரம் என்னும் மிருதியும்
மேன்மக்கள் தம் மரபும் வாழ்வின் மகிழ்ச்சியும் இவையே அறத்தின் நான்கு தூண்கள்!

சிற்றின்பம் பொருளும் கண்டு மயங்காத மாந்தர்கள் தரும சாத்திரம் படிப்பார்கள்
தரும சாத்திரம் கற்கும் புண்ணியர்க்கு என்றென்றும் வேதமே பிரமாணம்!

சுருதியும் மிருதியம் இவ்வரண்டும் அனைவர்க்கும் இருகண்கள் போலாகும்
அவ்விரண்டும் முரண்படுமே ஆயின் இரண்டுமே பிரமாணம் என்றுரைப்பார் மேன்மக்களே!

Friday, January 31, 2020

தரும சாத்திரம் - 1

சின்ன வெங்காயம் பூண்டு காளான் மலினத்தில் விளைபொருட்கள்
தின்ன கூடாது இருபிறப்பாளர்கள் என்றானே மனு  ஒருபொழுதும்!

நல்ல பசுவின் பாலும் மற்றும் எருமை பாலை தவிர மற்றவற்றின்
பாலனைத்தும் பருகாப்பாலே! அறிந்திடுவீர் நம் மறபை!

கன்றில்லா மாட்டின் பாலும் ஆடு ஒட்டகம் கழுதை பாலும்
ஈன்ற பசுவின் முதல் பத்துநாள் பாலும் பருகாப்பாலே!

ஒற்றைக் குளம் கொண்ட மாக்கள் பாலும் வேற்று தாயின் பாலும்
கறந்து பின்பு புளித்த பாலும் பருகாப்பாலே சொன்னான் மனு!

நாட்டுக்கோழி பன்றி பூண்டோடு காளானும் வெங்காயம்
அறிந்து உண்ணும் இருபிறப்பாளர் தம் குலம் இழப்பர்!

தெரிந்தும் தெரியாலும் மேற்கூறிய ஆறு உணவையும் புசித்தவர்
இருபிறப்பாளர் ஒரு முழு வருடத்திற்கு ஆச்சரிப்பர் சந்தாப்பணம் என்னும் நோன்பே!

Saturday, May 19, 2018

வேதோக்த உபநயனம்..........

வேதோக்த உபநயனம் - அறிவோமா?

இன்றய தினங்களில் லௌகீக உபநயங்களும், சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு திருவிழா போல ஒரே நாளில் முடிக்கும் இந்த கிராமத்தின் விவரங்களை அறிவோமா?

க³ர்பா⁴ஷ்டமேঽப்³தே³ குர்வீத ப்³ராஹ்மணஸ்யௌபநாயநம் ।
க³ர்பா⁴தே³காத³ஶே ராஜ்ஞோ க³ர்பா⁴த் து த்³வாத³ஶே விஶ: ॥  2.36

தாயின் கர்பத்தில் இருந்து எட்டு வருடங்களில் ப்ராம்மணனும், பதினோரு வருடங்களில் அரசனும், பன்னிரண்டாவது வருடத்தில் வைசியனும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும்.

ஆ ஷோத³ஶாத்³ ப்³ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்ததே ।
ஆ த்³வாவிம்ஶாத் க்ஷத்ரப³ந்தோ⁴ரா சதுர்விம்ஶதேர்விஶ: ॥ 2.37

பதினாறு வயதிற்குள்  ப்ராம்மணனும், இருப்பது இரண்டு வயதிற்குள்  க்ஷத்ரியனும், இருப்பது நான்கு வயதிற்குள் வைச்யனும்  உபநயம் செய்து கொண்டு, சாவித்ரி என்ற காயத்ரி மந்த்ர உபதேசம்  பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத ஊர்த்⁴வம் த்ரயோঽப்யேதே யதா²காலமஸம்ஸ்க்ருʼதா: ।
ஸாவித்ரீபதிதா வ்ராத்யா ப⁴வந்த்யார்யவிக³ர்ஹிதா: ॥ 2.39

மேற்கூறிய வயது வரம்பிற்குள் , உபநயனம் ஆகி, ப்ரம்மோபதேசம் என்னும் சாவித்ரி மந்திர உபதேசம் ஆகா விடின் அந்த சிறுவர்கள் உபநயனம் செய்து கொள்ளும் யோக்கியதையை இழந்து விடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் வ்ராத்யர்கள் அல்லது தம் குடிமையை இழந்தவர்கள் என்று சான்றோர்களால் (ஆரியர்களால்) இகழ  படுவார்கள்.

கார்ஷ்ணரௌரவபா³ஸ்தாநி சர்மாணி ப்³ரஹ்மசாரிண: ।
வஸீரந்நாநுபூர்வ்யேண ஶாணக்ஷௌமாவிகாநி ச ॥  2.41

இனி பிரம்மச்சாரிகள் அணியும் ஆடை பற்றிய விவரங்கள் . மேல் துணி - கரு  மானின்  (க்ருஷ்ணாஜினம்)   தோல் - பிராம்மணன், புள்ளி மானின் தோல் - க்ஷத்திரியன், ஆட்டின் தோல் - வைசியன் , மேல் வஸ்திரமாக அணிய வேண்டும்.  கீழ் வஸ்திரம் - சணல் துணி - பிராம்மணன், நார் துணி - க்ஷத்திரியன், கம்பளி துணி - வைசியன் அணிதல் வேண்டும்.

மௌஞ்ஜீ த்ரிவ்ருʼத் ஸமா ஶ்லக்ஷ்ணா கார்யா விப்ரஸ்ய மேக²லா ।
க்ஷத்ரியஸ்ய து மௌர்வீ ஜ்யா வைஶ்யஸ்ய ஶணதாந்தவீ ॥ 2.42

இனி மேகலை என்னும் (இடுப்பில் காட்டும் கயிறு) பற்றிய விவரங்கள். பிராம்மணன்  முஞ்சி என்னுள் புல்லால் ஆகிய மூன்று இழைகள் கொண்ட பின்னல் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும். முஞ்சி என்னும் புல்லால் ஆனதால் தான் மௌஞ்சி என்று பெயர். (முஞ்சி பில் இல்ல விட்டால் தர்ப்பை புல்லாலும் செய்யலாம்).  க்ஷத்ரியன் மூர்வ என்னும் வில்லின் நாணால் ஆன  மேகலையும், வைசியன் சணலால் ஆன மேகலையும் தரிக்க வேண்டும்.

கார்பாஸமுபவீதம் ஸ்யாத்³ விப்ரஸ்யௌர்த்⁴வவ்ருʼதம் த்ரிவ்ருʼத் ।
ஶணஸூத்ரமயம் ராஜ்ஞோ வைஶ்யஸ்யாவிகஸௌத்ரிகம் ॥ 2.44

இனி உபவீதம் பற்றிய விவரங்கள். பஞ்சு நூலால் ஆகிய பூணூல் ப்ராம்மணனும், சணலால் ஆகிய பொன்னால் அரசனும், கம்புளி நூலால் ஆகிய பூணலை வைசியனும் தரிக்க வேண்டும்.

ப்³ராஹ்மணோ பை³ல்வபாலாஶௌ க்ஷத்ரியோ வாடகா²தி³ரௌ ।
பைலவௌது³ம்ப³ரௌ வைஶ்யோ த³ண்டா³நர்ஹந்தி த⁴ர்மத: ॥ 2.45

உபநயம் செய்து கொண்ட பிரம்மச்சாரிகள், தங்கள் கைகளில் தரிக்கும் தண்டத்தின் வ்விவரங்கள் இனி. பிராம்மணன்  - பிளவை மரம், பலாச மரம், க்ஷத்திரியன்  -கருங்காலி, ஆலமரம் , வைசியன் - அத்தி  மரம், பிலு (ஒரு வகை புல்) ஆகிய கிளைகளை தண்டமாக தரித்தல் வேண்டும்.

கேஶாந்திகோ ப்³ராஹ்மணஸ்ய த³ண்ட:³ கார்ய: ப்ரமாணத: ।
லலாடஸம்மிதோ ராஜ்ஞ: ஸ்யாத் து நாஸாந்திகோ விஶ: ॥  2.46

இனி தண்டத்தின் நீளம். - பிராம்மணன் - தலை முடி வரை, க்ஷத்திரியன் - நெற்றி வரை, வைசியன் - மூக்கு வரையிலும் நீளம் உள்ள தண்டத்தை தரிக்க வேண்டும்.

ருʼஜவஸ்தே து ஸர்வே ஸ்யுரவ்ரணா: ஸௌம்யத³ர்ஶநா: ।
அநுத்³வேக³கரா ந்ரூʼணாம் ஸத்வசோঽநக்³நிதூ³ஷிதா: ॥ 2.47

தண்டம் என்பது கோணல் இல்லாமல், நீரானதாக, தீயால் கெட்ட படுத்த படாததாக இருத்தல் வேண்டும். தண்டத்தை கண்டால், எவருக்கும் காயம் ஏற்பட கூடாது.

ப்ரதிக்³ருʼஹ்யேப்ஸிதம் த³ண்ட³முபஸ்தா²ய ச பா⁴ஸ்கரம் ।
ப்ரத³க்ஷிணம் பரீத்யாக்³நிம் சரேத்³ பை⁴க்ஷம் யதா²விதி⁴ ॥ 2.48

மேற்கூறிய படி தண்டத்தை தரித்தவனாக, சூரியனை வணங்கி(சந்தியா வந்தனத்தால்), அக்னியை வணங்கி , ப்ரதக்ஷிணம் செய்து (ஷமிதா தானத்தால்) ஒரு ப்ரம்ம சாரி பிக்ஷைக்கு செல்ல வேண்டும்.

ப⁴வத்பூர்வம் சரேத்³ பை⁴க்ஷமுபநீதோ த்³விஜோத்தம: ।
ப⁴வந்மத்⁴யம் து ராஜந்யோ வைஶ்யஸ்து ப⁴வது³த்தரம் ॥2.49

பிராம்மணன் - பவதி பி⁴க்ஷாம் தேஹி , க்ஷத்திரியன் - பி⁴க்ஷாம் பவதி தேஹி , வைசியன் - பி⁴க்ஷாம் தேஹி பவதி  என்றும் பிக்ஷை கேட்க வேண்டும்.

இப்படி பிரம்மச்சர்யத்தை எச்சரிக்க வேண்டிய நியமத்தை பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே மனு தெள்ள தெளிவாக சொல்லி இருக்கின்றார்.