Friday, January 27, 2023

எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள்.....

எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள் எல்லாம் போக்கி என்னை ஆட்கொண்ட சங்கரன் உறை கோயில் காஞ்சி என்னும் காமகோடியே! ஆவிகள் ஐந்தும் ஒடுங்கி மனத்துட் புகுந்து இந்திரியங்கள் ஐந்தும் ஒடுங்கி எந்தன் பழவினைகள் எல்லாம் ஒடுங்கி எந்தன் அறிவும் ஆற்றலும் ஒடுங்கி ஆத்துமவடிவில் அனைத்தும் அடங்கி பேரானந்தக் கடலில் நான் மூழ்கும் நேரம் என்னப்பன் சங்கரன் கோயில் தம் மணிக்கதவுகள் திறக்கும் நேரம்! அருள் வெள்ளம் மேலிட கருணை என்னும் கடலில் மூழ்கி நான் என்னும் நிலை மறந்து பேரானந்த கடலில் களிப்புற்று என்னப்பன் திருவடிகளை எந்தன் சென்னியில் சூடி அனுபூதி பெறும் நேரம் - என்னப்பன் சங்கரன் கருணைக் கடைக்கண் எந்தன் மீது படும் நேரமே!

No comments:

Post a Comment