Sunday, August 6, 2017

வேத விருதம்

பார்ப்பனர் என்று சொல்லுவோர்கள் இருபிறப்பார்கள்
அவர்கள் முதல் மூன்று வருணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்

அறுதொழிலோர் அந்தணர் என்று வள்ளுவன் சொன்னான்
அதனை மனு அவனும் சொன்னானே தரும சாஸ்திரத்தில்

அரசாளும் மன்னார்வர்கள் அவர்கள் தானும்
வணிகம்  செய்து பொருளீட்டும் வைசியர்களும்

நிலத்தை உழும் உழவர்களும் பூவைசியர்கள்
ஆடு மாடு மேய்ப்பவர்கள் கோ வைசியர்கள்

பொன்னும் பொருளும் உணவுப் பண்டம் விற்பனை செய்யும்
மக்கள் எல்லாம் வைசியர்கள் தெரிந்து கொள்ளுவோம்

ஆக பிரம்ம கிஷத்ரிய வைசியர்கள் பார்ப்பனர்கள் தாம்
அவர்கள் எல்லோரும் வேதம் கற்று அறநெறி கொள்வர்

பன்னிரண்டு வயதிற்குள்ளே பூணல்  பூண்டு
வேத விரதம் கொண்டு அவர்கள் வேதம் பயிலுவர்

அம்மியதன் மீதில் ஏறி நின்று கொண்டுமே
தர்பையினால் கயிறாம் அந்த மௌஞ்சியை தரிப்பர்

உபநயம் என்று சொல்லும் சடங்கின் பொழுது
தங்கள் அகக்கண்ணை  அச்ச்சாரியன் திறந்தும் வைப்பான்

தாயின் வயிற்றில் பிறப்பதுவும் முதற் பிறவியாம்
பின்பு உபநயன வேள்வியினால் இரு பிறவியாம்

எனவே சங்கத் தமிழில் துவிஜர்களை பார்ப்பனரென்பர்
வேதம் சொல்லும் மார்க்கம் என்றும் புனிதமானது

வேத மார்க்கம் வாழ்க வாழ்க வாழ்க வேதியர்
வேதம் சொல்லும் வழி முறைகள் ஒங்க ஓங்கவே

வேள்வித் தீயும் ஒங்க ஒங்க ஒங்க வேதமும்
வேதம் சொல்லும் சாத்திரங்கள் வாழ்க வாழ்கவே

வேத மாதா சரஸ்வதியும் வாழ்க வாழ்கவே
பாரதமாம் புண்யபூமி வாழ்க வாழ்கவே

நாத்தீகரும் நீசர்களும் வீழ்க வீழ்கவே
மதம்   மாற்றும் மடயர்களும் வீழ்க வீழ்கவே !

No comments:

Post a Comment