Tuesday, August 8, 2017

வந்தே மாதரம்

வந்தே  மாதரம் பாடலை கேட்கையில்  உன்மேல் அன்பு பிறக்குதம்மா!
என்னுள்ளம் உடலும் உயிரும் உனக்கே என்னும் உணர்வு பிறக்குதம்மா !

எதிரிகள் உன்னை தாக்கிட வந்தால் உள்ளம் துடிக்குதாம்மா!
உடலும் உயிரும் எல்லாம் உனக்காய்ப் போரிடாத தோணுதம்மா!

உன் புகழைப் பாட மறுக்கும் பேர்களை எல்லாம்  வெறுக்கத்த தோணுதம்மா!
மண்ணும் மலையும் காடும் மேடும் எல்லாம் நீயம்மா!

காஸ்யப முனிவன் பெருந்தவம் செய்த காஷ்மீர் நீயம்மா!
அகத்தியன் தமிழை வளர்த்த குமரிக் கண்டம் நீயம்மா!

உன் அன்புக்கரத்தில் ஒரு சிறு பிள்ளை என்னையும் ஏற்றுக்கொள் !
உன்மடியில் பிறந்தோர் அனைவரும் மிக்க புண்ணியம் செய்தோரே!

No comments:

Post a Comment