Saturday, July 15, 2017

செந்தமிழ்நாடும் அதன் பெருமையும்

மதத்தை மாற்றிக் கொள்ளும் மூடர்களே கேளுங்கள்
மதத்தை மாற்றிக் கொண்டால் உங்கள் மரபு மாறுமோ ?

மரபதுவும் மாறி விட்டால் தானும் போதுமோ?
மரபணுவை மாற்றிக்கொள்ள தானும் முடியுமோ?

சிவா பெருமான் முருகன் தந்த தங்க தமிழினை
தாரை வார்க்க உங்களுக்கு உண்டோ அருகதை?

சங்கம் நாட்டித் தமிழ் வளர்த்த எங்கள் மதுரையாம்
பங்கம் இன்றித் தமிழில் நூலை தந்த முனிவனாம்

குடந்தை மாநகரம் தானே  கோயில்கள்  நகரம்
மடந்தை பெண்கள் நிறைந்த எங்கள் சேர நாடுமே

மீனும் முத்தும் நிறைந்த எங்கள் பாண்டிய நாடு
மானும் சோறும் விளையும் நல்ல சோழநாடுமே

மலைகள் யானை நிறைந்த எங்கள் சேர நாடும் தான்
கலைகள் பலவும் வளரும் நல்ல பல்லவ நாடு

வேதம் தருமம் விளைந்த எங்கள் தென் தமிழ்நாடு
பேதம் இன்றி அனைவரும் தான் வாழும் தமிழ்நாடு

வேங்கடமாம் வடக்கில் எல்லை தமிழின் நாட்டிற்க்கே
குமரிமுனை தெற்கில் கொண்ட தென் தமிழ் நாடு

வட வேங்கடமுடையான் அருள் வடக்கில் இருக்குமே
தென் குமாரி அன்னை அருள் தெற்கில் இருக்குமே

திரு நாகைக் காரோணம் இருக்கும் கிழக்கிலே
பெருங்காவின் பகவதியும் இருப்பாள்  மேற்கிலே

எங்கள் தெய்வம் வாழும் ஊரில் வேற்று மரபினர்
தங்களுடைய பொய்க்கதைகள் சொல்வர் நித்தமும்

வாழ்க வாழ்க எங்களுடைய செந்தமிழ்நாடு
வாழ்க வாழ்க நாங்கள் வாழும் பாரத நாடு

வீழ்க வீழ்க வந்தேறிகள் பொய்யர் கூட்டங்கள்
வீழ்க வீழ்க நயவஞ்சகர் தங்கள் கூட்டமும்

No comments:

Post a Comment