Monday, July 17, 2017

திருமகள் பெருமை

திருப்பாற்கடல் தன் மகளாம் பார்க்கவன் புதல்வி
கருநீல மேனி மாலைக்  கைப் பிடித்தாளே

வெள்ளி தங்கம் போல வண்ணம் கொண்ட திருமகள்
சுள்ளி விலுவ மரத்தினாலே வேள்வியும்  கொள்வாள்

பெண்கள் நெற்றி வீட்டின் நிலவில்  நித்தியம்  இருப்பாள்
கண்கள் இமையும் போல மாலும் அவளும் இருப்பார்

பெற்ற தாயைப் போல பக்தர் துயரம் துடைப்பாள்
கற்ற சேய்கள் தம்முடைய வினைகள் அறுப்பாள்

திருமாலின் திருமார்பில் நித்தியம்  உறையும்
திருமங்கை திருப்பாதம் போற்றி போற்றியே !

No comments:

Post a Comment