Wednesday, April 11, 2018

ஆச்சார்ய வைபவத்தை பறை சாற்றும் தோடகாஷ்டகம்...

Image result for shankaracharya and thotaka

विदिताखिलशास्त्रसुधाजलधे
महितोपनिषत् कथितार्थनिधे |
हृदये कलये विमलं चरणं
भव शंकर देशिक मे शरणम् ||१||
viditAkhilasAstrasudhAjaladhE
mahitOpanishat kathitArthanidhE |
hridayE kalayE vimalam charaNam
bhava sankara dEsika mE saraNam || (1)
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 1.
கடல் போன்ற சாத்திரங்களை அறிந்தவனே! உபநிஷத்துக்கள் தன் மெய்ப்பொருளை விளக்கியவனே! என் நெஞ்சில் வைத்தேன் நின் திருப்பாதத்தை ! சங்கர தேசிகனே! நீயே எனக்கு கதி! 
करुणावरुणालय पालय मां
भवसागरदुःखविदूनहृदम् |
रचयाखिलदर्शनतत्त्वविदं
भव शंकर देशिक मे शरणम् ||२||
karuNAvaruNAlaya pAlaya mAm
bhavasAgara dukhkha vidUnahridam |
rachayAkhiladarsanatattvavidam
bhava sankara dEsika mE saraNam || (2)
கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.
கருணைக் கடலே உன்னை போற்றுகின்றேன்! இந்த சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கன்றது  என் மனம். அனைத்து (அத்துவைத  ...) தர்ஷனைகளையும் எனக்கு புரியும் படி செய்வாய் ! சங்கர தேசிகனே! நின் திருப்பதங்களே எனக்கு கதி! 
भवता जनता सुहिता भविता
निजबोधविचारण चारुमते |
कलयेश्वरजीवविवेकविदं
भव शंकर देशिक मे शरणम् ||३||
bhavatA janatA suhitA bhavitA
nijabOdhavichAraNa chArumatE |
kalyEsvara jIvavivEkavidam
bhava sankara dEsika mE saraNam || (3)
பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.
சம்சாரத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுகிப்பிப்பவனே!  துரீய ஸ்திதியான நிஜபோத விசாரத்தால், பூவுர்ணமி நிலவை போல ஒளிர்பவனே!ஆசார்யனே! எனக்கு ஜீவா - ஈஸ்வர சம்மந்தத்தை பற்றிய விவேகத்தை அருள்வாய்! சங்கர தேஷியானே! நின் திருப்பாதங்கள் எனக்கு கதி! 
भव एव भवानिति मे नितरां
समजायत चेतसि कौतुकिता |
मम वारय मोहमहाजलधिं
भव शंकर देशिक मे शरणं ||४||
bhava Eva bhavA niti mE nitarAm
samajAyata chEtasi kowtukitA |
mama vAraya mOhamahAjaladhim
bhava sankara dEsika mE saranam || (4)
பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.
தாங்கள் தான் ஈஸ்வரனின் ஸ்வரூபம் (ஈஸ்வரோ குரு அதேமாதி...) என்று அத்துவைத அம்ருதத்தை உணர்வதால், உள்ளத்தில் குதூகலம் பிரைக்கின்றது.அளவற்ற மொக்கடலில் இருந்து எண்ணெய் காத்து ரக்ஷிக்க வேண்டும்! சங்கர தேசிகனே!  நின் திருப்பதங்களே எனக்கு கதி! 
सुकृते | अधिकृते बहुधा भवतो
भविता समदर्शनलालसता |
अतिदीनमिमं परिपालय मां
भव शंकर देशिक मे शरणम् ||५||
sukritE(a)dhikritE bahudhA bhavatO
bhavitA samadarsanalAlasatA |
atidInamimam paripAlaya mAm
bhava sankara dEsika mE saraNam || (5)
ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.
முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பாயானாலும் தங்கள் கிருபாயாலும் ஆத்ம ஞானம் (சம தர்ஷனம்) என்னும் விஷயத்தில் அதிக இச்சை ஏற்படும். ஏழையேன் ஆகிய என்னையும் காத்து ரக்ஷிக்க வேண்டும்! சங்கர தேசிகனே!நின் திருப்பாதங்களே எனக்கு சரண்!
जगतीमवितुं कलिताकृतयो
विचरन्ति महामहसश्छलतः |
अहिमांशुरिवात्र विभासि गुरो
भव शंकर देशिक मे शरणम् ||६||
jagatImavitum kalitAkritayO
vicharanti mahAmahasachalata: |
ahimAmsurivAtra vibhAsi gurO
bhavasankara dEsika mE saraNam || (6)
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.
இந்த உலகத்தை உய்விக்க பெரிய மஹான்கள் பற்பல ரூபத்தில் உதிப்பார்கள்! என் ஆச்சார்ய ஸ்ரேஷ்டனே! அந்த புண்ய புருஷர்களுக்கு எல்லாம் சூரியினை போல திகழும் ஞான சூரியனே! சங்கர தேசிகனே! நின் திருப்பாதங்கள் எனக்கு கதி! 
गुरुपुंगव पुंगवकेतन ते
समतामयतां नहि को | अपि सुधीः |
शरणागतवत्सल तत्त्वनिधे
भव शंकर देशिक मे शरणम् ||७||
guru pungava pungava kEtanatE
samatAmayatAm nahi kOpi sudhIhi |
saraNAgatavatsala tattvanidhE
bhavasankara dEsikamE saraNam || (7)
குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.
ஆச்சார்யர்களுள் உத்தமனே! காளை கொடியுடைய என் ஈசனே!  உனக்கு ஈடு இணை மற்றொருவர் இல்லை இந்த புவியிலும் வேறெங்கும்! நின்னிடத்தில் சரண் புகுந்தவர்களை காத்திடும்  கருணை கடலே! உபநிஷத்துக்கள் போதிக்கும் தத்துவங்கள் அனைத்திற்கும் உறைவிடம் நீயே! சங்கர தேசிகனே! நீயே எனக்கு அடைக்கலம்!
विदिता न मया विशदैककला
न च किंचन काञ्चनमस्ति गुरो |
द्रुतमेव विधेहि कृपां सहजां
भव शंकर देशिक मे शरणम् ||८||
viditA na mayA visadaikakalA
na cha kinchana kAnchana masti gurO |
drutamEva vidhEhi krupAm sahajAm
bhava sankara dEsika mE saraNam || (8)
விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.
ஆச்சார்ய ஸ்ரேஷ்டனே!  ஆன்மீக சாத்திரத்தின் எந்த பகுதியையும் அறியாத பேதை நான்! பொண்ணோ பொருளோ கொஞ்சம் கூட இல்லாதவன் நான்! தங்களுக்கு பிறவியிலேயே (ஸஹஜாம்) உள்ள அந்த கருணை, கிருபையை என் மீது பொழிய வேண்டும். சங்கர தேசிகனே ! உன்னை அல்லல் சரண் வேறில்லை எனக்கு! 

No comments:

Post a Comment